districts

img

நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றுக!

தென்காசி ,டிச. 27  நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்  செவ்வாய்க்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம், குருவிகுளம், பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  சங்கரன் கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம் ,நகராட்சி அலு வலகம், வட்டாட்சியர் அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவேங்கடத்தில் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பும் குருவி குளத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமலை முருகன், மாவட்டப் பொருளாளர் வேல்ராஜன், மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் வட்டக்கிளை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பாலுசாமி பேசினார். கடையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு  அரசு அலுவலர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் துரைசிங்  மற்றும் வட்டக் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.