திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே ராமராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் அரசு உதவி பெறும் நேரு துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் வாசலில் சாக்கடை கால்வாய் சரியாக தூர்வாரப்படாததால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர் மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.