மதுரை, பிப். 17- உதவிபெறும் பிரிவு பணி யாளர்களை சுயநிதிப்பிரிவுக ளுக்குப் பயன்படுத்தக் கூடாது, அரசுக் கல்லூரி பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் சலுகைகள் அனைத்தும் உதவிபெறும் கல்லூ ரிப் பணியாளர்களுக்கு வழங்கிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்க த்தின் (டான்சாக்) சார்பில் மதுரை செல்லூர் மண்டல கல்லூரிக் கல்வி இணைஇயக்குநர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மதுரை மண்டலத் தலைவர் இரா.இரமேஷ் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் பா. மனோகரன் முன்னிலை வகித்தார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சி.முனியசாமி விளக்கி பேசினார், மாநிலப் பொருளாளர் மு.இராஜகுமார், முன்னாள் இணைப்பொதுச்செயலாளர் பி.இராமசுப்பு, மூட்டா முதலாம் மண்டலச் செயலாளர் பேராசிரி யர் பெர்மின் ஆஞ்சலோ செல்வின், மூட்டா இரண்டாம் மண்ட லத் தலைவர் பேராசிரியர் ஞானே ஸ்வரன் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் க.ஷெரீப் நிறைவுரையாற்றினார்.