districts

மதுரை முக்கிய செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்ணாடி மணி,  சங்கு வளையல் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை, ஜூன் 24- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில்  நடைபெற்று வரும்  2ம்  கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன மணி, கண்ணாடி மணிகள், சங்கு வளையல் செய்ய பயன்படும் மூலப்  பொருளான சங்கு கண்டெடுக்கப்பட்டது... வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட  அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், தங்க பட்டை,  சுடு மண்ணால் ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி,  காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக  முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்ததால் ஆன  பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட 2200 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது சுடு மண்ணால் ஆன மணி,  கண்ணாடி மணிகள் , சங்கு வளையல் செய்ய பயன்படும் மூலப் பொருளான சங்கு கண்டெடுக்கப்பட்டது. முன் னோர்கள் அணிகலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது, தங்க அணிகலம், சுடுமண்  மணி, கண்ணாடி மணி, சங்கு உள்ளிட்ட அணிகலன்கள் கிடைத்து வருவதன் மூலம் தெரிவதாக தொல்லியல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.

அடிப்படை வசதிகளை நிறைவேற்றுக! ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை 

மதுரை, ஜூன் 24-  மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அடுத்துள்ள தனக்கன்குளம் ஊராட்சியில் உள்ளது திருவள்ளுவர் நகர். இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கள் உள்ளன. இங்கு குடிநீர் மற்றும் சாலை வசதிகள்  இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படு கிறது.  இந்நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்ப ரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.  குறைகளை கேட்க யாரும் வராததால் ஊராட்சி ஒன்றிய அலுவலக கதவை பூட்டினர். இதையடுத்து சில அலு வலர்கள் வெளியே வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும், லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அலுவ லர்கள் உறுதியளித்தனர். அதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க பேரவை

மதுரை, ஜூன். 24-   தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க  மதுரை கிழக்கு வட்டக் கிளை 5 ஆவது ஆண்டு பேரவை கிளைத்  தலைவர் நி. வெள்ளைக்கக்கன் தலைமை யில் நடைபெற்றது.  ஆர். பாண்டி வரவேற்று பேசினார், மாவட்ட தலைவர் சு. கிருஷ்ணன் துவக்கி  வைத்து பேசினார். கிளைச் செயலாளர் ஆர். சேகர் வேலையறிகையும், பொருளா ளர் ஜி. எல்லையா வரவு-செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர்,மாவட்ட செயலாளர் அ.பால்முருகன் நிறைவுரையாற்றினார். நிர்வாகி டி. ராஜப்பா நன்றி கூறினார். சத்துணவு, அங்கன்வாடி நிலையி லுள்ள ஓய்வூதியர்கள் அனைவருக்கும் அரசு ஊதிய குழுவில் அறிவித்தபடி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850  வழங்க  வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர் ஓய்வூ தியர் ஆகியோருக்கு அகவிலைப்படி நிலுவைகளை உடனடியாக வழங்க என்று  வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.