மதுரை, மே 5- மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மே 5 வெள்ளியன்று நடைபெற்றது. இதனைக் காணவந்த மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் கிளைகள் மற்றும் வாலிபர் சங்கம் ,மாதர் சங்கம்,சிறுபான்மை நலக்குழு சார்பில் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. மத்திய - 1 ஆம் பகுதிக்குழு அழகரடி வ. உ. சி. கிளை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பகுதிக்குழு செயலாளர் வை. ஸ்டாலின், மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள், பகுதிக்குழு உறுப்பினர்கள் சரவணகுமார், சிவானந்தம், கிளை செயலாளர்கள் இராஜமுருகன், சிவா மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாமேதை காரல் மார்க்ஸ் 205 வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு சுயராஜ்ஜிய புரம் மாரி - மணவாளன் படிப்பகத்தில் பொதுமக்களுக்கு அன்ன தானத்தை மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன் ஆகியோர் வழங்கி துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் குமரவேல் தலைமை வகித்தார் .
இதில் பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. ராதா, கே. அலாவுதீன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதுரை மத்திய பகுதி- 2 சார்பில் தைக்கால் தெருவில் அன்னதானம் வழங்கப்பட்டது. தெற்கு பகுதிக்குழு சார்பில் இஸ்மாயில்புரம் கிளையில் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ. ரமேஷ், பகுதிக்குழு செயலாளர் ஜெ. லெனின் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார் இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மத்திய - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் அனுமார் கோவில் படித்துறை கட்சி கிளை மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை நலக் குழு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பழங்காநத்தம் பகுதிக்குழு சார்பில் ஜெயம் தியேட்டர் அருகில் தியாகி தோழர் கு. லீலாவதி நினைவு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. இதனை மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் துவக்கி வைத்தார் .இதில் மாநகர் மாவட்டச் செயலாளர் டி. செல்வா, பகுதிக்குழு தலைவர் சரவணன், பகுதிக்குழு செயலாளர் க. கௌதம் பாரதி, பொருளாளர் விஷ்ணுபிரியன் மற்றும் பகுதிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கட்டுமா னத்தொழிலாளர்கள் அன்னதானம் சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் வடக்கு பகுதிக்குழு சார்பில் செல்லூர் அய்யனார் கோவில், தாகூர் நகர் கிளைகள் சார்பில் அன்னதான நிகழ்ச்சியினை சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. லெனின், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி. சுப்பையா, தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர். கட்சியின் பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி, சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் கே. அலாவுதீன், கட்டுமான தொழிலாளர் சங்க பகுதிக்குழு செயலாளர் ஜாகீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிறுபான்மை நலக்குழு
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலயம் இணைந்து மத நல்லிணக்க நீர் மோர் பந்தல் பைபாஸ் ரோடு பெத்தானியாபுரத்தில் அமைக்கப்பட்டு, மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன் துவக்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், அமைப்பின் மாவட்ட தலைவர் கே. அலாவுதீன், மாவட்டத் துணைச் செயலாளர் ஜான் மைக்கேல், 63 வது வார்டு கிளைச் செயலாளர் டேவிட் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாதர் சங்கம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் நரிமேடு பகுதியிலும், அரசரடி பகுதிக்குழு சார்பில் சொக்கலிங்க நகரிலும் மக்களுக்கு நீர்மோர், உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில செயலாளர் ஆர். சசிகலா, மாவட்டச் செயலாளர் வை. ஜென்னியம்மாள் , மாவட்ட தலைவர் ஆர். லதா, மாவட்ட பொரு ளாளர் பா. சாந்தி, துணை செயலாளர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் பானுமதி, தேன்மொழி மற்றும் அங்கயற்கண்ணி, ஜெயா, லீலாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மேலப்பொன்ன கரம், அரசரடி பகுதிக்குழு மற்றும் கரிமேடு புதுப்பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பாக மதநல்லினக்க நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி கிரம்மர்புரம் பகுதியில் பகுதிக்குழு செயலாளர் நவீன் தலைமையில் நடைபெற்றது. இதில் 56 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள், 62வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரன், ஜமாத் கௌரவ தலைவர் ஜவஹர், ஜமாத் செயலாளர் முகமது அலி, வாலிபர் சங்க மாவட்டம் செயலாளர் டி. செல்வா, பகுதிக்குழு தலைவர் ஆசாத், பொருளாளர் சிந்து, பகுதிகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மகபூப்பாளையத்தில் நடைபெற்ற நீர்,மோர் வழங்கும் நிகழ்ச்சியில் பகுதிக்குழு செயலாளர் க. செந்தில், பொருளாளர் வேல்தேவா, கிளை நிர்வாகிகள் கார்த்திகா, அக்ஷயா, மதி, மாதர் சங்க மாவட்ட நிர்வாகி விமலா ஆகியோர் கலந்து கொண்டனர் .இந்த இரண்டு நிகழ்வையும் மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் துவக்கி வைத்தார். மீனாம்பாள்புரம் பகுதிக்குழு சார்பாக தியாகிகள் மாரி, மணவாளன் நினைவிடத்தில் நடைபெற்ற நீர்,மோர் வழங்கும் நிகழ்ச்சியினை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். இதில் பகுதி செயலாளர் பிரசாந்த் , பகுதிக்குழு நிர்வாகிகள் விஜய், ஹரி , சூர்யா, முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.