தேனி, ஆக.22- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட நிதியை மற்ற பணி களுக்கு மடைமாற்றம் செய்வதை கைவிட வேண்டும். வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். கேரள அரசை போல வீடற்ற அனைவருக்கும் ரூ.10 லட்சத்தில் வீடு கட்டித் தர வேண்டும். வீடற்ற ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாயத்தொழிலா ளர்கள் சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 22 செவ்வாயன்று தமிழ்நாடு முழு வதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங் கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனிமாவட்டத்தில் 8 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வடுகபட்டியில் உள்ள பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தாலுகா தலைவர் பி. இளங்கோவன் தலைமை வகித்தார். ஏ.மன்னர் மன்னர் முன் னிலை வகித்தார்.
போராட்டத்தை ஆதரித்து விவசாயி கள் சங்க தாலுகா செயலாளர் சி. நாகராஜ்,மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எம்.வி.முருகன்,மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சு. வெண்மணி ஆகியோர் பேசினர். சிஐ டியு மாவட்டச் செயலாளர் எம். இராமச் சந்திரன் நிறைவுரையாற்றினார். 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கம்பம் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத் தலைவர்கள் பி.கருப்பசாமி,லட்சுமி அம்மாள்,மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர்.போராட்டத்தை ஆதரித்து சிபிஎம் கூடலூர் ஏரியா செயலாளர் ஜெயராஜ்,வாலிபர் சங்க தலைவர் நித்திய குமார்,ஓய்வு பெற்ற சங்கத் தலைவர் ஸ்ரீ ராமன் ஆகியோர் பேசினர்.விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் காஜா மைதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கம்பம் புதுப்பட்டி பேரூராட்சியில் சங்கத் தலைவர்கள் மகேஸ்வரி, கர்ணன் ஆகியோர் தலைமை தாங்கி னர். மாவட்டச் செயலாளர் எல் ஆர் சங்கரசுப்பு விளக்கிப் பேசினார்.
கேகே பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர் பன்னீர் வேல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுப்பட்டி கிளைச் செயலாளர் ரெங்கேஸ்வரன், சிஐடியு தலைவர் மோகன், கம்பம் ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போடி வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஏரியா தலைவர் காமராஜ்,செயலாளர் தங்கபாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர்.சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.செல்வம்,மாதர் சங்க மாவட்ட தலைவர் மீனா,வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சி.முனீஸ்வரன்,தாலுகா செயலாளர் செல்லப்பாண்டி,சிஐடியு செயலாளர் பி.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை சிறப்புரையாற்றினார்.
ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கே.தயாளன்,ஒன்றியச் செயலாளர் எஸ்.அய்யர் ஆகியோர் தலைமை வகித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன் துவக்கி வைத்துப் பேசினார். சிபிஎம் ஒன்றியச்செயலாளர் மா. தங்கராஜ்,சிஐடியு தலைவர் எஸ்.ராமர்,விவசாயிகள் சங்க செயலாளர் எஸ்.சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உள்பட்ட பலர் கலந்து கொண்டனர். சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி மகா லட்சுமி,பால்பாண்டி ஆகியோர் தலைமை வகித்தனர்..மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம் ஆதரித்துப் பேசினார். உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பெருமாள்,தங்கமாயி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் பாளையம் ஒன்றிய பொறுப்பு செயலாளர் எஸ்.லட்சுமணன் ஆத ரித்து பேசினார்.
மயிலாடும்பாறை
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வேலவன் தலைமை தாங்கி னார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் போஸ் ஆதரித்துப் பேசினார். முடிவில் ஒன்றிய ஆணையர் இளங்கோவனி டம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தாலுகா தலைவர் பாண்டியம்மாள் தலைமை யேற்றார். சிஐடியு மாவட்ட தலைவர் எம்.மகாலட்சுமி துவக்கிவைத்துப் பேசினார். வட்டச் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே..சுப்பாராஜ், சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.சரோஜா ஆகியோர் ஆதரித்துப் பேசி னர்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு ஒன்றிய தலை வர் சின்னத்தம்பி தலைமை தாங்கி னார். ஒன்றிய செயலாளர் பால்சாமி விளக்கிப் பேசினார்.சிஐடியு மாவட்ட நிர்வாகி சந்தனம் ஆதரித்துப் பேசி னார். மாவட்ட பொருளாளர் ஜோதி லட்சுமி நிறைவுரையாற்றினார. ஒன்றிய பொருளாளர் மாரியம்மாள், சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ஜூ னன், ஒன்றியச்செயலாளர் சசிகுமார், நகரச்செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை சந்தித்து மனு கொடுக்க சென்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இல்லாததால் அலுவலகத்துக்குள் ளேயே காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், மீனாட்சி ஆகியோர் வந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு இராஜபாளையம் மேற்கு ஒன்றிய பொருளாளர் கலைச்செல்வி, கிழக்கு ஒன்றிய பொருளாளர் ஜெயலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி,மேற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜ் விளக்கிப் பேசினர்.சிஐடியு கைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமர் ஆதரித்துப் பேசி னார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி நிறைவுரை யாற்றினார். சிபிஎம் நகர செயலாளர் மாரியப்பன், மேற்கு ஒன்றிய செயலா ளர் சந்தனகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம் காளை யார்கோவிலில் ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் ராஜாங்கம், ஒன்றிய பொரு ளாளர் முத்துராஜா ஆகியோர் விளக்கிப் பேசினர். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் சாத்தப்பன், ஒன்றிய தலை வர் திருநாவுக்கரசு ஆகியோர் ஆத ரித்துப் பேசினர்.
தொப்பம்பட்டி
திண்டுக்கல் மாவட்டம் தொப் பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எம். பழனிச்சாமி தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் என். கனகு துவக்கி வைத்துப் பேசினார். விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் கே. அருள்செல்வன் நிறைவுரை யாற்றினார். விவசாயிகள் சங்க ஒன் றிய செயலாளர் கே. சின்னத்துரை, கட்டுமான சங்க ஒன்றிய தலைவர் கே. சக்திவேல் ஆகியோர் ஆதரித்தப் பேசினர்.