districts

img

கானா நாட்டின் வர்த்தக ஆணையராக  மேலூரைச் சேர்ந்தவர்  பொறுப்பேற்பு

மதுரை, பிப்.18- மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சூரக்குண்டு வைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பெரியசாமி. இவரது மகன்   அருண்ராஜாவும் தொழிலதிபர் ஆவார். இவர், இந்திய- ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சிலில் கானா நாட்டின் வர்த்தக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஐ.இ.டி.ஒ.,  என்.ஆர்.ஐ. கவுன்சில் அவார்ட்ஸ், ஜி.ஐ.ஒ. மாநாட்டில் இந்திய- கானா வர்த்தக ஆணையராக அருண்ராஜா பெரியசாமிக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தில்லி சென்று கானா துணைத்  தூதர் குவக் ஆஸ்மாக் செர்மேக்கை சந்தித்து வாழ்த்துப்  பெற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு களை விரைவுப்படுத்த வர்த்தக ஆணையர் அருண் ராஜா பெரியசாமி மதுரையில் உள்ள மீனாட்சி கிரானைட்  குழும இயக்குநர் , வணிகம் மற்றும் கல்வி துறையின் பல்வேறு பங்குதாரர்கள், கானா வேளாண்மை துணை அமைச்சர் யாவ் பிரிம்பாங் அடோ , கானாவுக்கான இந்திய உயர் ஆணையர் சுகந்த் ராஜாராம் ஆகி யோர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்  களில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து வர்த்தக ஆணையராக நியமிக்கப் பட்டுள்ள அருண்ராஜா பெரியசாமி கூறுகையில், மதுரை யில் இந்திய- கானா அலுவலக திறப்பு விழா, பதவி யேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் இருநாட்டு கமிஷனர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த  அலுவலகம் இரு நாட்டுக்கும் வர்த்தக பாலமாக இயங்கும். இதன் மூலம் தொழில் வளத்தை உயர்த்த பாடுபடுவதாக தெரிவித்தார்.