districts

img

மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு போராட்டம்

தேனி, ஏப்.22- தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் எட்டு மணி நேரம் வேலை என்பதை 12 மணி நேரமாக மாற்றுவதற்காக கொண்டு வரப்  பட்ட தொழிற்சாலை சட்ட மசோதா விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த சட்டமசோதாவை உடனடியாக திரும்பப்பெறக்கோரியும் ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கம்பம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஏரியா குழு உறுப்பினர் வி.மோகன் தலைமை வகித்தார். ஏரியாக்குழு உறுப்பினர் எச்.ஸ்ரீராமன், தமுஎகச நிர்வாகி முரளி  ஆகியோர் பேசினர். ஏரியா செயலா ளர் கே.ஆர்.லெனின் ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்து பேசினார். 

திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் தலைமை தபால் நிலையம் முன்பு சிஐடியு  சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்  றது. சிஐடியு மாவட்டத்தலைவர் கே.ஆர்.கணேசன், மாவட்டச்செய லாளர் கே.பிரபாகரன், மாவட்ட பொருளாளர் தவக்குமார், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க  திண்டுக்கல் கோட்ட துணைப்  பொதுச்செயலாளர் வெங்கிடு சாமி, ஆட்டோ சங்க மாவட்டச்செய லாளர் என்.பாண்டியன் ஆகியோர் பேசினர். 

பழனி

பழனி தலைமை தபால் நிலை யம் முன்பு சிஐடியு சார்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு கன்வீனர் கே.பிச்சைமுத்து, பஞ்  சாலை சங்க மாவட்ட தலைவர் ஆர். ஈஸ்வரன், ஊரக வளர்ச்சி உள் ளாட்சி ஊழியர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பி.மாரியப்பன், சிபிஎம் பழனி ஒன்றிய செயலாளர் பி.செல்வராஜ் ஆகியோர் பேசி னர். 

திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் ,வத்திராயி ருப்பு, இராஜபாளையம் உள் ளிட்ட போக்குவரத்து கழக பணி மனைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்  கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது திருவில்லிபுத்தூரில் கிளைத் தலைவர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். நிர்வாகி கள் ராஜா,தென்னரசு தங்கப்பழம் ஆகியோர் பேசினர். வத்திராயி ருப்பில் கிளை நிர்வாகி முருகன் தலைமை தாங்கினார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் பெனரி பேசி னார். பின்னர் வேலை நிறுத்த நோட்  டீஸ் கிளை மேலாளரிடம் வழங் கப்பட்டது. இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் பி.கே.விஜயன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்  றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்  பினர் பி.லிங்கம், நிர்வாகிகள் வி. ரவி, ஆர்.பி.முத்துமாரி ஆகியோர் பேசினர்.