districts

img

தமிழ்நாடுமின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் பணியாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும்

தமிழ்நாடுமின்வாரியத்தில் பணிபுரியும் கேங்மேன் பணியாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாதபுரம் மேற்பார்வைப்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்து பேசினார் த.மிழ்நாடு மின் பொறியாளர்கள் அமைப்பு மாநில தலைவர் ஆர்.குருவேல், கோட்டத் தலைவர் சசிகுமார், கோட்டச் செயலாளர் ஜெபமணி, திட்டச் செயலாளர் காசிநாதன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் ஆரோக்கியம் முருகேசன் மற்றும் பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

;