districts

img

இயற்கை முறையில் உணவுப்பொருள் தயாரிக்கும் காந்திகிராம பல்கலைக்கழக மாணவிகள்

சின்னாளப்பட்டி, ஏப்.13- காந்திகிராம பல்கலைக் கழக வேளாண்மை பட்டப்  படிப்பு மாணவிகள் இயற்கை முறையில் வல்லாரை கீரை  ஜாம் மற்றும் இட்லி பொடி யை தயாரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்க லைக்கழகத்தில் நான்காம்‌‌ ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பை மாணவிகள் பாலமுனீஸ் வரி, ஷெர்லி,பிளஸ்சி, ஹேம பிரியா, லெட்சுமி, அபிநயா ஆகியோர் பயின்று வரு கின்றனர். இவர்கள் ஊத் துப்பட்டி கிராமத்தில் நடந்த  திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு வகுப்பின் கீழ்‌ இயற்கை முறையில் வல்லாரை கீரை  உற்பத்தி  செய்து,  வல்லாரை இலை களோடு பழங்களையும் சேர்த்து   ஜாம் மற்றும் இட்லி பொடி தயார்செய்து வரு கின்றனர். கீரைகளை குழந் தைகள் உண்ணுவதற்கு ஏற்ற  வகையில் தருவதே நோக்  கமாக கொண்டு தயாரித் துள்ளனர். இந்த வல்லாரை ஜாம் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்  கும் எனவும் , வயதானவர் களுக்கு  அல்சைமர் நோய்  வராமல் தடுக்கும்,பெண்கள் மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் வயிற்று வலியை குறைக்கிறது என்று மாணவி கள் தெரிவித்துள்ளனர். இந்த ஜாம் மற்றும் பொடி யினை பொது மக்கள் ஆர் வத்துடன் அதிக அளவில் வாங்கி செல்வதால் தொட ர்ந்து  இவற்றை  தயாரித்து,  பல்கலைக்கழக வளா கத்தில் விற்பனை செய்து  வருகின்றனர்.