சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் டிசம்பர் 7 அன்று தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார். பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார். மத்திய மக்கள் தொடர்பகம் மண்டல இயக்குனர் ஜெ.காமராஜ், சிவகங்கை நகர் மன்றத்தலைவர் சி.எம்.துரை ஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.