இராமநாதபுரம்,ஜன.27- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட அமைப்புக் கூட்டம் பரமக்குடியில் ராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு பேசுகையில், இராம நாதபுரம் மாவட்டத்தில் விவசாயத்தை பறவைகள் தொடர்ந்து அழித்து வருவதை தடுப்பதற்காகவே மலைகளில் வாழ்ந்த குரு விக்காரர்களை அழைத்து வந்தவர் சேதுபதி மன்னர். அதற்கான ஆதாரம்தான் மன்ன ரால் ஒதுக்கப்பட்ட இடம் தான் இன்றும் இராமநாதபுரத்தில் குருவிக்காரர் தெரு சாட்சியமாக உள்ளது. மதுரையில் குரு விக்காரர் சாலையாக உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு இவர்களுக்கு பழங்குடி சாதிச் சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும். வீடுமனை பட்டா வழங்க முன்னுரிமை வழங்க உச்சநீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நிறைவேற்றக்கோரி மாவட்ட மாநாடு விரைவில் நடத்தப்படும் என்று கூறினார். இதில் 15 பேர் கொண்ட மாவட்ட அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. கன்வீனராக ர.முனியசாமி தேர்வு செய்யப் பட்டார். இக்கூட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை மற்றும் பலர் பேசினர்.