மதுரை, மார்ச் 4- மதுரை மெட்ரோ ரயில் திட்டம், சிட்கோ தொழிற் பூங்கா, போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க புதிய திட்டங்கள் பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டச் செயல்பாடுகளுக்கு தமிழக அரசு 2023-2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்க வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. சங்கத்தின் தலைவர் என்.ஜெக தீசன், செயலாளர் என்.செல்வம் ஆகி யோர் தமிழக பட்ஜெட்டிற்கு முன் நடை பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பத்திரப்பதிவு வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடம் அளித்த மனுவின் சுருக்கத்தில் கூறப்பட்டி ருப்பதாவது:- மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் நடைமுறைப் படுத்த வேண்டும். மதுரை-ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 31 கி.மீட்டர் தூரம் மெட்ரோ ரயில் திட்டம் செயல் படுத்தலாம் என்றும், இதற்கிடையே 17 ரயில் நிலைய நிறுத்தங்கள் அமைக் கப்படுவதோடு, சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்டப் பாலம் அமைத்து செயல்படுத்தப் போவதாகவும் அறி விக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு நடப்பாண்டு நிதி நிலை அறிக் கையில் போதிய நிதி ஒதுக்க வேண்டும். தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை முன்னிறுத்தும் வகை யில் மதுரை சக்கிமங்கலத்தில் சிட்கோ புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது இந்த திட்ட செயல்பாட்டிற்கான முயற்சி களை விரைவாக மேற்கொள்ள வேண்டும். மதுரை நகரின் மையப் பகுதியில் தற்போது அமைந்துள்ள பல்வேறு மொத்த விற்பனை சந்தைகள் அனைத் தையும் புறநகர் பகுதிகளுக்கு மாற்றி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மதுரை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை மாநகராட்சிக்கு வெளியே புதிய இடத்திற்கு மாற்றியமைக்கப்படு வதாக தமிழக அரசின் சார்பில் அறி விக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறைச் சாலை இருந்த இடம் மக்களின் பயன் பாட்டுக்கு உகந்த வகையில் பசுமைப் பகுதியாகவும் மேம்படுத்த வேண்டும். விரகனூர் சந்திப்பு, அப்போலோ மருத்துவமனை சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு, இராஜாஜி மருத்துவ மனை சந்திப்பு போன்ற அதிக போக்கு வரத்து நெரிசல் காணப்படும் சந்திப்பு களில் புதிய மேம்பாலங்கள் அமைப்ப தற்கான விரிவான திட்ட அறிக்கைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்க வேண்டும். மதுரை விமான நிலையத்தின் ஓடு தளத்தை விரிவாக்கம் செய்வதற்கு, மேல் பகுதியில் விமான ஓடுதளமும், கீழ்பகுதியில் வாகனங்கள் செல்லத் தக்க வகையில் அண்டர்பாஸ் அமைக்க வேண்டும். கப்பல் மற்றும் விமான மார்க்கமாக ஏற்றுமதி செய்யப்படும் சரக்கு களுக்கு போக்குவரத்துக் கட்டணம் மீதான ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி விலக்கு நீட்டிக்கப்பட வேண்டும். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உணவு பதனீட்டுத் தொழில்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பெற்ற உணவுப் பொருட்களின் தொழில் முதலீடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மதுரையில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை ஏற்று மதி மண்டலம், சக்கிமங்கலத்தில் அமைக்கப்படவிருக்கும் சிட்கோ புதிய தொழில் பேட்டை மற்றும் மதுரை, தேனி மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைத்தல், ரப்பர் சம்பந்தப்பட்ட பல்வேறு தொழிற் சாலைகள், மென்பொருள் நிறுவ னங்கள், விருதுநகர் மாவட்டத்தில் மசாலாப் பொருட்கள், பருப்பு மற்றும் பல்வேறு தானியங்களுக்கு, குறிப் பாக சிறு தானியங்களுக்கான சிறந்த செயலாக்க வசதிகள் மேற்கொள்ளப் படவிருப்பதால் இப்பகுதிகளில் தொழில் முதலீடுகள் வெகுவாக அதி கரித்து வேலை வாய்ப்புகளும் கணிச மாக அதிகரிக்கும். இவை அனைத்தும் மேற்கொள் ளப்பட்டு செயல்படுத்தப்பட்டால், தென் மாவட்டங்களில் தொழில் வணி கம் ஏற்றம் காணும், படித்த இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி யில் தென் தமிழகம் முன்னேறும். இவ் வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.