districts

img

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் மலர் தூவி மரியாதை

தமிழ்க்கவிஞர் நாளையொட்டி, சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் ஊராட்சியில் உள்ள சங்கப்புலவர்  ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு ஏப்ரல் 29 அன்று  தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர்  ப.மதுசூதன் ரெட்டி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன், ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாச்சலம் மற்றும் தமிழறிஞர்கள் பலர் உடனிருந்தனர்.