districts

img

குமரியில் கன மழை; மேலகிருஷ்ணன் புதூரில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் மக்கள் தத்தளிப்பு

நாகர்கோவில்/குழித்துறை, டிச. 6- கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் ஞாயிறு மற்றும் திங்களன்று கனமழை பெய்தது. இதனால் மழை வெள்ளம் புகுந்த பகுதிகளில் மக்கள் தத்தளித்து வருகிறார்கள். மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. மலையோர பகுதிகள். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்கிறது. மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகி றது. திங்களன்று காலை வரை மாவட்டத்தில் அதிக பட்ச மாக 88.2 மி.மீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42,82 அடியாகும்.  அணைக்கு 1224கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 444 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. பெருஞ் சாணி நீர்மட்டம் 72.93 அடியாகும். அணைக்கு 1480 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1614 கன அடிதண்ணீர் திறந்துவிடப்பட்டி ருந்தது. சிற்றார்-1ல் 16.60 அடியாக நீர்மட்டம்  இருந்தது. அணைக்கு 576 கன அடி தண்ணீர் வரத்துகாணப்பட்ட நிலை யில் 536 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

பேச்சிப்பாறை அணையின் நீர்திறப்பு மற்றும் அருமனை, குலசேகரம் பகுதிகளில் பெய்த கனமழையால் தாமிரணி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் கன மழையின் காரணமாக இராஜாக்கமங்கலம் வட்டாரம் மேல கிருஷ்ணன் புதூர் ஊராட்சி அலுவலகம் எதிரில் குளம்போல் தண்ணீர் தேங்கி வீடுக ளுக்குள் புகுந்து செப்டிங் டேக்க் நிறைந்தும், குடிநீர் தொட்டியில் அழுக்குநீர் சேர்ந்தும் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி வடி கால் வசதி செய்து தண்ணீரை வெளி யேற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜாக்கமங்கலம் வட்டாரக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.