கடமலைக்குண்டு,மே.28- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் கோம்பைத்தொழு அருகே மேக மலை அருவி அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக மேகமலை வனப்பகுதி யில் போதிய அளவில் மழை இல்லை. அதன் காரணமாக அருவியில் நீர்வரத்து மிக குறைந்து காணப்பட்டது. ஆனாலும் விடுமுறை நாட்கள் என்பதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண் ணிக்கை அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 30-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கோம்பைத்தொழு மற்றும் மேகமலை வனப்பகுதியில் கன மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து சுதாரித்துக் கொண்ட மேகமலை வனத் துறையினர் விரைவாக அருவிக்கு சென்று அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வேகமாக வெளியேறுமாறு அறிவுறுத்தனர். வனத்துறையினரின் அறி வுறுத்தலை தொடர்ந்து சுற்றுலா பயணி கள் அருவியில் இருந்து வேகமாக கிளம்பிச் சென்றனர். சுற்றுலா பயணிகள் கிளம்பிச் சென்ற 10 நிமிடங்களுக்கு பிறகு அருவியில் நீர்வரத்து மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. சிறிது நேரத்தில் திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு சுற்றுலா பயணிகளை வெளியேற்றியதால் வெள்ளப்பெருக்கு காரணமாக எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. நேற்று காலை வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில் சுற்றுலா பயணிகளை அரு விக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இருப்பினும் மேகமலை வனப் பகுதியில் அடிக்கடி மழை பெய்து வரு வதால் வனத்துறையினர் தொடர்ந்து அருவியில் பாதுகாப்பு பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர். திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக அடுத்த 2 மாதங்கள் வரை அருவியில் நீர்வரத்து காணப்படும் என்பதால் சுற்றுலா பயணிகளும் கோம் பைத்தொழு பகுதி விவசாயிகளும் பொது மக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.