districts

img

பிப். 4,5.6 திண்டுக்கல்லில் மாநில டேக்வாண்டோ போட்டி

திண்டுக்கல், பிப்.2- 33வது மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பி யன்ஷிப் போட்டிகள் திண்டுக்கல்லில் பிப்ரவரி 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்  நாடு டேக்வாண்டோ அசோசியேசன் தலைவர் முனைவர்  ஐசரி கே.கணேஷ், மற்றும் செல்வமணி, பழனி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார், நாடாளுமன்ற உறுப்பி னர் வேலுச்சாமி, மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை  மேயர் ராஜப்பா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ள னர். இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்  பில் தமிழ்நாடு டேக்வாண்டோ அசோசியேசன் மாநில இணைச்செயலாளர் மாஸ்டர் எஸ்.ஜோதிபாசு, அணில் மார்க்கெட்டிங் கம்பெனியின் மேலாண் இயக்கு நர் என். கமலஹாசன், திண்டுக்கல் மாவட்ட தேக் வாண்டோ அசோசியேசன் தலைவர் வழக்கறிஞர் சார்  வாகன், லக்ஜர் வேர்ல்டு பள்ளி தாளாளர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

;