districts

img

விதிமுறைகளை மீறி கண்மாய் கரையில் சாலை அமைத்து செல்லும் கல்குவாரி வாகனங்கள்

விருதுநகர், ஏப்.21- விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்துறை அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு : நரிக்குடி, குறையரைவாசித்தான் ஆகிய பகுதிகளில் நெல் பயிரிடப்பட்டது. ஆனால், பயிர்கள் நன்கு விளைந்து வரும் நிலை யில், போதிய மழையில்லாத காரணத்தால் பயிர்கள் நாசமாகின. எனவே, நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.முருகன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த வேளாண் அதிகாரி, நிவாரணம் கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாட்டில் தென்னை விவசாயம் வேளாண்மைத்துறையின் கீழ்  உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பல்வேறு சலு கைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. எனவே, அதை, கேரளா, கர்நாடகா மாநிலத்தைப் போல் தோட்டக் கலைத்துறை யுடன் தென்னையை இணைக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியம் மூலம் விவ சாயிகளுக்கு இலவசப் பயிற்சியளிக்க வேண்டும். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கான குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மாவட்ட வேளாண் அதிகாரி, அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. எனவே, எளிதில் சலுகைகளை பெறலாம் என தெரிவித்தார். காரியாபட்டி பகுதியில் 3 வாரச் சந்தைகள் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலும் வியா பாரிகளே காய்கறிகளை மதுரையிலிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். இதனால், உழவர் சந்தைகள் சரிவர செயல் படாத நிலை உள்ளது. எனவே, விவசாயிக ளிடம் காய்கறி உற்பத்தியை அதிகரிக்க ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், அரசே குறைந்தபட்ச ஆதார விலை வழங்கி உழவர் சந்தை மூலம் விற்பனை செய்யலாம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வி.முருகன் தெரிவித்தார்.

சத்துணவு திட்டத்திற்கு விவசாயிகளிடம் காய்கறிகள் வாங்கப்படும்

அதற்கு பதிலளித்த ஆட்சியர், விருது நகர், சாத்தூர், காரியாபட்டி உள்ளிட்ட பல இடங்களில் உழவர் சந்தை நிலை இதுதான். எனவே, அதை சரி செய்ய வேண்டும். மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சத்துணவு திட்டத்திற்கு வாங்கி பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். வனவிலங்குகளால் பயிர்கள் சேதம டைகின்றன. பல நேரங்களில் விவசாயிகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இது குறித்து திருவில்லிபுத்தூரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட கூட்டம் கடந்த 5 மாதங்க ளாக நடைபெறவில்லையென தமிழக விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா தெரிவித்தார். உடனடியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் பதிலளித்தார். நமது மாவட்டத்தில் காட்டுப் பன்றிகள் அதிகரித்து விட்டன.  இதனால், பயிர்கள் அதிகமாக சேதமடைகின்றன. எனவே, அவற்றை சுட்டுப்பிடிக்க ஏற்பாடு செய்யப் படுமா? என வி.முருகன் கேள்வி எழுப்பி னார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், காட்டுப் பன்றிகள், மான்களால் பயிர்கள் சேதமா னால் நிவாரணமளிக்க ரூ.5 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

அரசு அனுமதி வழங்கி னால் சுட்டுப் பிடிக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். அருப்புக்கோட்டை அருகே புலியூரான் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிக்குண்டு கிராமத்தில் 40 ஏக்கரில்  கண்மாய் உள்ளது.  இந்த கண்மாய் பாசனத்தை நம்பியே கோணப்பநேந்தல் மற்றும் பன்னிக்குண்டு விவசாயிகள் சுமார் 150 ஏக்கரில் விவாசயம் செய்து வருகின்றனர். இந்நிலை யில், தனியார்  கல்குவாரி நிறுவனம், விதி முறைகளை மீறி, கண்மாயின் உள்பகுதி, கரைப்பகுதி மற்றும்  வடபுறத்தில் உள்ள  நீர் வரத்து ஓடைகளையும் ஆக்கிரமித்து சாலைஅமைத்து அதில் கனரக வாகனங்க ளை தற்போது வரை இயக்கி வருகின்றனர். இதனால் அப்பகுதி விவசாயம் கடுமை யாக பாதிக்கப்பட்டு வருகிறது என அப்பகுதி விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி. முருகன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், ஏற்கனவே, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளோம். அதற்குள்  அப்பகுதியை ஜி.பி.எஸ் மற்ம் ஏரியல் சர்வே  எடுக்கப்படும். விதிமுறைகள் மீறப்பட்டி ருப்பது உறுதி செய்யப்பட்டால் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார்.