districts

img

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடுவதற்கு எதிர்ப்பு

சிவகங்கை, டிச.9-   நீர்வள ஆதாரத்தை பாதிக்கும் யூகலிப்டஸ் மரக் கன்றுகள் நடக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சிவகங்கை மாவட்டத் தில் யூகலிப்டஸ் மரக்கன்று கள் நடுவதற்கு எதிர்ப்பு தெரி வித்தும் வனத்துறையைக் கண்டித்தும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித் தார். மாநில துணைத்தலை வர் முத்துராமு ,மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்டத் துணைத் தலை வர் அழகர்சாமி ,மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்ட செயலாளர் சேது ராமன், விவசாயத் தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.