தேனி ,ஜூன்.16 நீர்நிலைகளை தனியார் கம்பெனிக ளுக்கு கொடுக்கும் நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் விவ சாயிகள் குறைதீர் கூட்டத்தை புறக்க ணித்து வெளிநடப்பு செய்தனர் . தேனி மாவட்டம், சின்னமனூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் சி.ஆனந்த், மாவட்ட வன அலுவலர் ஜெ.ஆர்.சமர்த்தா, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய பாராதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ) பொ.தனலெட்சுமி, உத்தமபாளையம் கோட்டாட்சியர் இரா.பால்பாண்டி, மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நில ஒருங்கிணைப்பு சட்டத்தில் நீர் நிலைகளை தனியார் கம்பெ னிகளுக்கு கொடுக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வெளியுறுத்தி சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் எஸ்.கே.பாண்டியன் ,
செயலாளர் டி.கண்ணன் தலைமையில் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் . தென்னைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குதல், தென்னை கிளஸ்டர் ( Cluster) அமைத்திட விரைந்து அனுமதி வழங்குதல், சண்முகா நதி நீர் பாசனம் திறந்து விடுதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கண்மாய்களை தூர்வாருதல், பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிக அளவில் உள்ளதால் அவர்களுக்கு காப்பீடு மற்றும் பட்டு உற்பத்திக்கு அதிகபட்ச ஆதார விலை வழங்குதல், வன நாற்று பண்ணைகளில் பிளாஸ்டிக் தடை செய்து மண் பானைகள் மற்றும் மூங்கில்கள் பயன்படுத்த கோருதல் மற்றும் நிரந்தர நெல் கொள்முதல் நிலை யம் அமைத்து தர கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விவசாயிகளால் முன்வைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் தென்னை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிலிருந்து தென்னை நார்கள் எடுத்து மண் சரியும் இடங்களில் தென்னை நாரினால் செய்யப்பட்ட கயிறு வலை (Coir Geotex tile) பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசா யிகள் அனைவரும் இதனை கூட்டு முயற்சி யாக செயல்படுத்த வேண்டும். இதில் அதிக இலாபம் பெறலாம் என தெரிவித்தார்.