ஒட்டன்சத்திரம், மே 12- ஒட்டன்சத்திரம் அருகே சாலைப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் விவ சாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை யில் இருந்து நாரப்பநாயக் கன்பட்டி ஆதிதிராவிடர் காலனி வழியாக சின்னக்காம்பட்டி சாலை 10 வருடத்திற்கு முன்பு போடப்பட்டு குண்டும் குழியுமாக மாறியது. இதனால் இந்த பகுதி யில் உள்ள விவசாயிகள் மற் றும் பொதுமக்கள் காய்கனி கள், பால் ஆகியவற்றை இடையக்கோட்டை, சின் னக்காம்பட்டிக்கு கொண்டு செல்ல சிரமப்பட்டனர். இந்நிலையில் பல லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தார் சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணி தொடங் கப்பட்டது. ஏற்கனவே இருந்த சாலையை பொக்லைன் இயந்திரம் கொண்டு தோண்டி எடுக்கப்பட்டு ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டன. ஏனோ அதற்கு பிறகு புதிய தார்ச்சாலை அமைக் கும் பணி கிடப்பில் போடப் பட்டு தற்போது அந்த சாலையின் வழியாக இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலை யில் உள்ளது. இதனால் விவ சாயிகள் மற்றும் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் உடன் தலையிட்டு இடையகோட் டையில் இருந்து நாரப்ப நாயக்கன்பட்டி வழியாக சின்னக்காம்பட்டி செல்லும் சாலையை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.