விருதுநகர், பிப்.7- விருதுநகர் மாவட்டம் காரியா பட்டி வட்டத்திற்குட்பட்ட ஆவி யூர், அரசகுளம், குரண்டி, மாங் குளம், கம்பிக்குடி உள்ளிட்ட கிரா மங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் 10 ஆயி ரம் ஏக்கரில் வெங்காயம், பருத்தி, உளுந்து, பாசிப் பயறு உள்ளிட்ட வற்றை பயிரிட்டிருந்தனர். இதற் காக விவசாயிகள் ஏக்கர் ஒன் றுக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்திருந்தனர். மேலும், பயிர் இன்சூரன்ஸ் தொகையையும் செலுத்தியிருந்தனர். இந்நிலையில், வெங்காயப் பயிர்கள் திருகல் நோய் மற்றும் வேர் அழுகல் நோயால் பாதிக் கப்பட்டன. இதேபோல் பருத்தி, பாசி, உளுந்து, நெல் போன்ற பயிர்களும் சேதமாகின. ஆனால், பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு தற்போது வரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப் படவில்லை. எனவே, உடனடி யாக இழப்பீட்டுத் தொகையை வழங்கிடக் கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் உள்ளிட்ட அனைத்து விவசாயிகள் சங்கங் கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வி.முருகன் தலை மையேற்றார். இதில், வட்ட செய லாளர் குமராண்டி, இளவரசன், சீனிவாசன், பாக்கியராஜ், ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.