districts

img

ஒட்டன்சத்திரம்: களம் இல்லாததால் சாலையில் பயிர்களை உலர்த்தும் விவசாயிகள்

ஒட்டன்சத்திரம், ஏப்.7-  ஒட்டன்சத்திரம் பகுதியில் உலர்களம் இல்லாத காரணத்தால் ஆபத்தான முறையில் நெடுஞ்சாலையில் பயிர்களை விவசாயிகள் உலர்த்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.  திண்டுக்கல மாவட்டம் ஒட்டன்சத்திரம்,  இடையக்கோட்டை, மார்க்கம்பட்டி, மாம்பாறை, சின்னக்காம்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் விவசாயிகள் தற்போது சோளக் கதிர்களை பயிரிட்டு. அவற்றை அறுவடை செய்தனர். ஈரப்பதமாக உள்ள சோளத்தை உலர்த்த அந்த பகுதியில் உலர்களம் இல்லாத காரணத்தினால் சாலையில் ஆபத்தான முறையில் சோளத்தை உலர்த்தி அவற்றை மூட்டைகளாக கட்டி வெளி மாவட்டங்களுக்கு அங்கிருந்தே அனுப்பி வைக்கின்றனர். சாலையில் தொடர்ச்சியாக பேருந்துகள், கார்கள் மற்றும் லாரிகள்,இரு சக்கர வாகனங்கள் என செல்வதும், வருவதுமாக இருக்கும். இதனால் சிறிது கவனம் சிதறினாலும் விவசாயிகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.  இரு சக்கர வாகன ஓட்டிகளும் கீழே விழும் ஆபத்தும் உள்ளது.   எனவே கிராமப்பகுதிகளில் விவசாயம் அதிகம் நடக்க கூடிய இடங்களில்  பயிர்களை உலர்த்தி எடுக்க உலர்களங்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.