ஒட்டன்சத்திரம், மார்ச் 13- ஒட்டன்சத்திரம் அருகே யானை தாக்கியதில் விவசாயி இறந்தார். தொடர்ந்து யானை நட மாட்டத்தை கண்டு விவசாயிகள் அச்சத்தோடு வாழ்ந்து வரு கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் ஒட் டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வடகாடு கிராமம் மற்றும் மலைப்பகுதியில் அடிவாரப்பகுதி யில் விருப்பாச்சி, சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி உள்ளிட்ட கிரா மப்பகுதியில் கரும்பு, வாழை, மக்கா சோளம், தென்னைமரங்கள் மற்றும் காய்கனிகள் உள்ளிட்ட அதிகளவு விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் யானை களுக்கு சரியான உணவு, தண்ணீர் கிடைக்காத நிலையில் அங்கி ருந்து கீழே இறங்கி வந்து கரும்பு, தென்னைமரம், மக்காசோளம் உள்ளிட்ட விவசாய பயிர்களை சாப்பிட்டு செல்கிறது. வடகாடு மலைப்பகுதியில் விவ சாயிகள் வெடி வைத்து யானை களை விரட்டி வருகிறார்கள். யானைகளை விவசாயப்பகு திகளுக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தரமாக நடவடிக்கை எடுக்காத நிலையில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் பழனி அருகே யானை தாக்கி துரைச்சாமி என்ற விவசாயி இறந்தார். இந்நிலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி ஊராட்சி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் விவசாயி சவுந்திர ராஜன்(வயது 45). ஊருக்கு அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி யின் அடிவாரத்தில் மக்காசோளம் அறுவடை செய்து நிலத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதனை ஒரு யானை வந்து மக்காசோளம் கதிரை சாப்பிட்டுக்கொண்டிருந்த தகவல் அறிந்து மார்ச் 12 அன்று அதிகாலை கிடைத்த தகவலை யடுத்து சவுந்திரராஜன் தோட்டத் திற்கு விரைந்து சென்று யானை யை சத்தம் போட்டு விரட்டினார். யானை திடீரென்று ஓடிவந்து விவசாயி சவுந்திரராஜனை தாக்கி யதில் அதே இடத்தில் அவர் இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து விரைந்து வந்த வனத் துறையினருடன் அப்பகுதி விவ சாயிகள், ஏன் யானையை எங்கள் பகுதியில் இருந்து விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதனால் பரபரப்பு ஏற் பட்டது. இதனையடுத்து யானை யை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் விவசாயிகளை சமரசம் செய்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாயி சவுந்திரராஜனின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பிவைத்த னர். ஒட்டன்சத்திரம் பகுதியில் யானைகள் தொந்தரவால் அவ திப்பட்டு வரும் விவசாயிகளை காப்பாற்றுவதற்கு கும்கி யானை யை வைத்து காட்டு யானைகளை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.