districts

img

விவசாயிகள் முறையீடு

இராமநாதபுரம் தாலுகா தேவிபட்டினம், இராமநாதபுரம், பெருங்குளம், மண்டபம்  ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போதிய பருவமழை பெய்யாததால் பயிர்கள் கருகியுள்ளன. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும் நிவாரணம் கோரியும்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இராமநாதபுரம்  வட்டாட்சியர் அலுவலகத்தில் முறையீடு இயக்கம் நடைபெற்றது.  பி.கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.முத்துராமு மற்றும் நிர்வாகிகள் விவசாயிகள் வட்டாட்சியரிடம் மனுக்களை அளித்தனர்.