சிவகங்கை, செப்.19- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கண்டரமாணிக்கம் அருகே வெளியாத்தூர் ஊராட்சியில் விவ சாய நிலத்தில் மதுபானக் கடை அமைப் பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தலைமையில் தொட ர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த காத்திருக்கும் போராட்டம் மது பானக் கடை திறக்கப்படாது என அதி காரிகள் உறுதி அளித்ததையடுத்து விலக்கி கொள்ளப்பட்டது. 4-ஆவது நாளான செவ்வாயன்று நடைபெற்ற போராட்டத்தில் விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் வீர பாண்டி, மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்டப் பொருளாளர் விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் (பொ) கருப்பு சாமி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சாந்தி, மாவட்டத் தலைவர் பாக்கிய லட்சுமி, மாவட்டப் பொருளாளர் ஜெயந்தி உட்பட பெண்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், டாஸ்மாக் கோட்ட மேலாளர், வட்டாட்சியர், கோட்டாட்சி யர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், கண்டரமாணிக்கம், வெளி யாத்தூர் பகுதியில் மதுபானக் கடை திறக்கப்படாது என்றும், கடையில் உள்ள மதுபானங்களை இரு தினங்களில் எடுத்து கொள்வதாகவும் அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதன் பின்னர் காத்திருக் கும் போராட்டம் முடிவுக்கு வந்தது.