விருதுநகர், ஜன.31- விருதுநகர் மாவட்டத்தில் கொள் முதல் நிலையங்களில் நாளொன் றுக்கு 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் நெல் மூட்டைகளை அளக்கும் வகை யில் நவீன கருவிகளை வைத்திருக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விருதுநகர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலு வலர் ரவிகுமார், வேளாண்மை துறை இணை இயக்குநர் ஆகியோர் முன் னிலை வகித்தனர். அப்போது நடை பெற்ற விவாதம் வருமாறு: விருதுநகர் மாவட்டத்தில் 27 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள் ளன. அதில் நாளொன்றுக்கு அதிக பட்சமாக 800 நெல் மூட்டைகள் மட்டுமே அளவீடு செய்யப்படுகின் றன. இதனால் விவசாயிகள் பலர் தனியார் வியாபாரிகளை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே. தின சரி 2ஆயிரம் முதல் 3 ஆயிரம் மூடை கள் அளவீடு செய்யும் வகையில் நவீன கருவிகள் வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.முருகன் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த ஆட்சியர், தற்போது 800 மூட்டைகள் வரை அள வீடு செய்யப்படுகின்றன, இதை அதி கரிக்க உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கொள்முதல் நிலையங்கள் அரு கிலேயே வியாபாரிகள் வந்து விவ சாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி நெல்லை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. எனவே. அங்கு வியாபாரி கள் வருவதை தடுக்க வேண்டும் என இருளப்பன் என்ற விவசாயி தெரி வித்தார்.
சுமைப்பணியாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்குக!
நெல் கொள்முதல் நிலையங்க ளில் உள்ள அதிகாரிகள் சுமைப்பணி தொழிலாளர்கள் மூலம் மூட்டை ஒன்றுக்கு 42 முதல் 45 சதவீதம் வரை கூடுதல் தொகை வசூலிக்க அதிகாரி கள் நிர்ப்பந்தம் செய்கின்றனர், இத னால். விவசாயிகளுக்கும் சுமைப் பணி தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்க முயற்சி செய்திட வேண்டும். மேலும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கூடுதல் தொகை யை அரசே வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அ,விஜயமுரு கன் தெரிவித்தார். மூளிப்பட்டி பகுதியில் பயிரிட்ட பருத்தி, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் போதிய மழை பெய்யாத காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி ஒருவர் தெரிவித்தார். அதற்கு பதில்கூறிய ஆட்சியர், இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வந்தது, அதைப் பார்த்தவுடன் நேரடி யாக அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்யப்பட்டுள்ளது, நிவாரணம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவித்தார்,
தரமற்ற பருத்தி விதைகள்
தரமற்ற பருத்தி விதைகளை தனி யார் நிறுவனத்தினர் விற்பனை செய்கின்றனர், அதை நம்பி விதைத்த தால் விவசாயிகள் பெரும் பாதிப்ப டைந்துள்ளனர் என விசாயி ஒருவர் புகார் தெரிவித்தார். பிரசித்தி பெற்ற இருக்கண்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். திடீரென பக்தர்களுக்கு உடல்நிலை சரியில்லையெனில் சாத்தூரில் இருந்து ஆம்புலன்ஸ் வர நீண்ட நேரம் ஆகிறது, எனவே. அங்கு 108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண் டும் என விவசாயி ஒருவர் தெரிவித் தார். அகு பதிலளித்த ஆட்சியர், அர சின் சார்பில். ஒவ்வொரு கோவி லுக்கும் ஒரு மாஸ்டர் பிளான் போடப் பட்டுள்ளது, அதில் இருக்கண்குடி கோவில் மேம்படுத்தப்படும், மேலும் 108 ஆம்புலன்ஸ் நிறுத்த ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து பேசிய ஆட்சியர், பொது மக்கள் குறைதீர் கூட்டத்திற் கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத் திற்கும் வித்தியாசம் உண்டு, குறை தீர் கூட்டத்திற்கு வருபவர்கள் தங்க ளது சொந்த கோரிக்கைகளுக்காக வும், விவசாயிகள் கூட்டத்திற்கு வரு பவர்கள் பொதுவான விவசாய பிரச்ச னைகளுக்காகவும் வருவார்கள், பொதுவான கோரிக்கையை விவ சாயிகள் கூறும் போது, சில நேரங்க ளில் கோபமாகக் கூட பேசியதுண்டு, அந்த இடத்தில் அப்படித்தான் பேசி யதாக வேண்டும், அவ்வாறு நீங்கள் அழுத்தம் தொடர்ந்து கொடுத்ததா லும், உறுதியாக பேசியதாலும் தான் நிறைய பிரச்சனைகளை என்னால் தீர்க்க முடிந்தது, ஒரு சில பிரச்ச னைகளை தீர்க்க முடியாமல் போயி ருக்கலாம். ஆனால் அதற்காக தொடர்ந்து முயற்சி செய்துள்ளேன். குறிப்பாக விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது, அதேபோல் ஆணைக்குட்டம் அணையின் கத வணைகளை மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என பல முயற்சி செய் தேன். இதற்காக அமைச்சர்களிட மும் பேசி எப்படியாவது அதை சரி செய்திட வேண்டும் என எண்ணியி ருந்தேன். சென்னைக்கு பணி மாறு தலாகி சென்றாலும் கூட ஆணைக் குட்டம் கதவணையை மறு சீர மைக்கும் முயற்சியை செய்வேன் எனக் கூறினார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் மற்றும் அரசு அலுவ லர்கள் பலர் மாவட்ட ஆட்சியருக்கு சால்வை அணிவித்து பிரியா விடை அளித்தனர்.