திருச்சுழி அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.28 லட்சம் மோசடி முன்னாள் நிர்வாகிகள் கைது
விருதுநகர், ஜன.5- விருதுநகர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.28 லட்சம் மோசடி செய்த தாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சுழி அருகே உள்ளது கேத்தநாயக்கன்பட்டி. இங்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 28 லட்சம் வரை மோசடி செய்ததாக முன்னாள் செயலா ளர்கள் மற்றும் தலைவர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சுழி அருகே உள்ள கேத்தநாயக்கன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் இயங்கி வரு கிறது. இச்சங்கத்தில் கடந்த 2012 மார்ச் 13 முதல் 2017 மார்ச் 31 வரை புத்தநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்தி ரன்(62), மிதிலைக்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (53)என்பவரும் பொறுப்புச் செயலாளராக இருந்து வந்துள்ள னர். செந்நல்குடியைச் சேர்ந்த குருசாமி(52) என்பவர் தலை வராகவும் பொறுப்பு வகித்து வந்துள்ளார். இவர்களது பதவிக்காலத்தில் நகைக் கடன் மற்றும் விவசாய கடன் வரவு கணக்குகளில் முறைகேடு நடை பெற்றுள்ளதாக சங்கங்களின் துணைப் பதிவாளர் விருது நகர் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகார் மேல் வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
ஆதிதிராவிடர்களின் நிலங்களை ஆக்கிரமித்ததற்கு கண்டனம் தேவகோட்டை கோட்டாட்சியரகம் முன்பு சிபிஎம்-விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, ஜன.5- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா புளி யால் வருவாய் கிராமம் மிக் கேல்பட்டியில் உள்ள ஆதி திராவிட மக்களுக்கான 35 ஏக்கர் நிலங்கள் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. இங்கு 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பயன்பாட்டில் உள்ள நிலங்களுக்கு இராம நாதபுரம் சமஸ்தானத்தில் ஆதிதிராவிடர் மக்கள் தங் கள்பெயரில் ரசீது பெற் றுள்ளனர். அதுமட்டுமல்லா மல் காடாக புதர் மண்டி கிடந்தநிலங்களை ஒழுங்கு படுத்தினர். இவர்களிடம் தேவையான ஆவணங்கள் உள்ளது. சவேரியார், ஞானமுத்து, மரிய சாமி மரி யேவரி உள்ளிட்ட ஆதி திராவிடர் மக்கள் பெயர் களில் நிலங்கள் உள்ளன. ஆதிதிராவிடர்களின் நிலங்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேவ கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீர பாண்டி தலைமை வகித்தார். சங்க மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளா ளர் விசுவநாதன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ,மாவட் டத் தலைவர் பொன்னுச் சாமி, கட்சியின் தேவ கோட்டை தாலுகா செய லாளர் செல்வம் மற்றும் கிராம மக்கள் அருள், சூஸை, அமல்ராஜ், பிச்சை ஆரோக் கியராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோட்டாட்சியர் அலுவ லக அதிகாரிகளுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பஃபர் ஸோன் பிரச்சனையில் எவ்விதக் குழப்பமும் தேவையில்லை, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
அமைச்சர் வி.என்.வாஸவன் உறுதி
சாந்தன்பாறை, ஜன.4- எந்தவிதக் குழப்பத்திற் கும் இடமளிக்காமல் பஃபர் ஸோன் பிரச்சனையில் அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று கேரள அமைச்சர் வி.என்.வாஸவன் தெரிவித் தார். சாந்தன்பாறையில் இடது ஜனநாயக முன்னணி சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றுகை யில் மேற்கண்டவாறு அமைச் சர் தெரிவித்தார். பஃபர் ஸோன் உள்பட மலையோர விவசாயிகளின் அனைத்துப் பிரச்சனை களுக்கும் காரணமாக இருந் தது காங்கிரஸ் அரசாங்கங் கள்தான். அனைத்துத் தவறு களையும் செய்துவிட்டு குற் றச்சாட்டுகளையும் முன் வைத்து இரட்டை வேடம் போடுகிறது காங்கிரஸ். வனம், வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறைகளின் கூட்டு முயற்சியுடன் பஃபர் ஸோன் மற்றும் மலையோர மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பிரச்ச னைகள் குறித்து ஆராய்வ தற்கான கால அளவு ஜனவரி 7 முதல் 23 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்தப் பிரச்சனைகளின் உண்மைத் தன்மையை நீதி மன்றத்தில் தெளிவுபடுத்து வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களும் சிறப்பாக மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. காட் கில், கஸ்தூரி ரங்கன், உம் மன் வி.உம்மன் குழு கமி ஷன் அறிக்கைகள் என அனைத்தையும் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசாங் கம்தான். மக்கள் வாழும் பகுதிகளை பஃபர் ஸோனாக மாற்றியவர்கள் தற்போது எல்டிஎஃப் அரசு மீது குற்றம் சுமத்துகிறார்கள்.இந்த விச யத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக்கூட்டி ஒரு முழு மையான ஆய்விற்கு இடது ஜனநாயக முன்னணி அரசு தயாரானது. மாவட்டத்தின் இடது சாரித் தலைவர்களுடன் முத லமைச்சரும் அமைச்சர் களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சம்பந்தப் பட்ட துறைசார்ந்த அதிகாரி கள், அரசு தலைமை வழக்க றிஞர் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடை பெற்றுள்ளது. இந்த அரசு யாரையும் கைவிட்டு விடாது என்று அமைச்சர் வி.என்.வாஸவன் மேலும் கூறி னார்.
ஆண்டிபட்டியில் உரிமையாளர்கள் பிடிவாதம் தொடரும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
தேனி, ஜன.5- விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி, டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு டி.சுப்பு லாபுரம் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் இந்த போராட்டத்தை அறிவித்து விசைத்தறிகளை இயக்காமல் உள்ளனர். இதன் காரணமாக தினந்தோறும் ரூ.20 லட்சம் மதிப்பிலான காட்டன் ரக சேலைகள் உற்பத்தி பாதிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் ஆண்டிபட்டி வட்டாட்சியர் சுந்தர்லால், டி.எஸ்.பி.ராமலிங்கம் ஆகியோர் தலைமை யில் தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடத்தி னர். இதில் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே தங்களது போராட்டம் தொடரும் என விசைத்தறி தொழிலாளர்கள் அறிவித்து ஜனவரி 5 அன்று 4-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்கம் சேட், அருணாசலம், அருண்மதி கணேசன், மணி, காளை, தொ.மு.ச. செல்வராஜ், ஏஐடியூசி சென்றாய பெருமாள், சிஐடியு ராமர் மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
3 ஆயிரம் வாழைகள் பாதிப்பு
திருநெல்வேலி, ஜன. 5- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அனவன்குடி யிருப்பு பகுதியில் ஏராளமான விவசாயிகள் நெல், கரும்பு, வாழை போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். தற்போது வாழை மரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்த நிலையில் வாழை மரங்களில் இலைக்கருகல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பலமுறை பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தும் வாழை மரங்களில் நோய் பாதிப்பு குறையவில்லை. இத னால் குலை தள்ளும் நிலையில் உள்ள சுமார் 3 ஆயிரம் வாழை மரங்களின் தண்டு பகுதி அழுகி, இலைகள் கருகத் தொடங்கியுள்ளன.