மதுரை, மார்ச் 18- மதுரை மக்களவை உறுப் பினர் சு.வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து மூன்று சக்கர வாக னங்கள், பேட்டரியில் இயங் கும் சக்கர நாற்காலிகள் மாற் றுத்திறனாளிகளுக்கு சனிக் கிழமையன்று வழங்கப் பட்டது. மதுரை சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்ற நிகழ்வில் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ரூ.6 லட்சத்து 29,500 மதிப்பி லான உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். இந்த உபகர ணங்கள் உங்களது வாழ்க் கைப் போராட்டத்திற்கு பக்க பலமாக இருக்கும் எனக் கூறி அவர்களை உற்சாகப்படுத் தினார். இந்நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாநகர் மாவட் டச் செயலாளர் மா.கணே சன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.இராஜேந்தி ரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.ஏ.இளங் கோவன், கோவிந்தராஜன், ஜா.நரசிம்மன், மற்றும் கோபிநாத், பகுதிச் செயலா ளர் ஜீவா, மக்களவை உறுப் பினர் அலுவலக ஒருங்கி ணைப்பாளர்கள் டி.ராம மூர்த்தி, எப்.ஜெ.ஜெரோம், துணைமேயர் டி.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் வீரமணி, பால முருகன், ஜோதிபாசு, சேது பதி மேல்நிலைப்பள்ளி தலை மையாசிரியர் கே.எஸ்.நாரா யணன், மாற்றுத்திறனாளி கள் நல அலுவலர் சுவாமி நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய சு.வெங்க டேசன், மதுரை மாவட்டம் முழுவதும் மாற்றுத்திற னாளி களுக்கென நடத்தப் பட்ட சிறப்பு முகாமில் 2,940 மாற்றுத் திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக் கான செயற்கை உபகர ணங்கள் தயாரிக்கும் பணி ரூ.10 கோடி மதிப்பில் நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றிய அமைச்சர் கர்நாடக மாநி லத்தைச் சேர்ந்தவர். அவர் அம்மாநில தேர்தலில் பிசி யாக உள்ளார். எப்படியும் இரண்டு மாதத்திற்குள் மது ரையில் விழா நடத்தி 2,940 மாற்றுத்திறனாளிகளுக்கும் உபகரணங்கள் வழங்கப் படும் என்றார்.