districts

img

திண்டுக்கல், பழனியில் சமத்துவ பொங்கல் விழா

திண்டுக்கல், ஜன.18-  தமிழர் திருநாளான பொங் கல் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டி கள் நடைபெற்றன.  திண்டுக்கல் மாநகராட்சி 10 ஆவது வார்டில்  வடக்கு  செல்  லாண்டியம்மன் கோவில் தெரு வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விளையாட்டு விழா  நடைபெற்றது. 10-க்கும் மேற்  பட்ட  விளையாட்டு போட்டி களில்  சிறுவர் முதல் பெரியவர் கள் வரை கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர். மாலை யில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.பாலாஜி, சேதுசிவன், கீதா, நகர நிர்வாகி கள் பிரேம்குமார், அஜீத், சூர்ய பிரகாஷ், பிரபு, தினேஷ், ஜான்,  ஜுலியான், ஷாம், முன்னாள்  மாவட்ட நிர்வாகிகள் ஏ.அரபு முகமது, விஷ்ணுவர்த்தன்,  அழகு, மோகனா, ஊர் நாட் டாமை மாரிமுத்து, இந்திய மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி கள் முகேஷ், தமிழ்செல்வன், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மாணவ, மாணவியர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

பழனி 

பழனியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம் சார்பாக சமத் துவ பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. அடிவாரம் பகுதியில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு பேராசிரியர் மீனா சுந்தர் தலைமை வகித்தார். முனைவர் மா.மாணிக்கம், டாக்டர் வேலுச்சாமி. முன்னாள் நகர்மன்றத் தலைவர்  வரத. இராஜமாணிக்கம், மாநிலக் குழு உறுப்பினர் இரா.ராஜேந்தி ரன், நல்லாசிரியர் ஜெகதீசன், நகர்மன்ற உறுப்பினர் சுபா,  கோபிநாத் (சிஐடியு), சிராஜ் நிஷா (அறிவியல் இயக்கம்),  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகளில் மாணவ, மாணவி யர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றனர்.  திண்டுக்கல்லில் துப்புரவுப் பணியாளர்களுடன் சிபிஎம், திமுக மாமன்ற உறுப்பினர்கள் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.  2 ஆவது வார்டில் நடைபெற்ற  நிகழ்ச்சி யில் சிபிஎம் மாமன்ற உறுப்பி னர் கே.எஸ்.கணேசன், 3வது வார்டு திமுக உறுப்பினர் இந்தி ராணி, சி.பி.போஸ் (சிஐடியு), உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இரண்டு வார்டுகளிலும் பணியாற்றும் துப்புரவுத் தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர்.  திருவள்ளுவர் தினத்தை யொட்டி திண்டுக்கல் லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளி யில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொங்கலிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிலை அமைப்புக்குழுவின் சார்பாக கணேசன், சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன்,  தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் செயலாளர் சி.பி.ஜெய சீலன், இந்திய ஜனநாயக வாலி பர் சங்க நகரத்தலைவர் அஜீத், பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நநி)