கொச்சி, மே 22- கே ரயில், மெட்ரோ மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் சந்திப்பு இடமான திருக்காக்கரை பயண மையமாக மாற் றப்படும் என்று எல்.டி.எப் ஒருங்கிணைப்பா ளர் ஈ.பி.ஜெயராஜன் தெரிவித்தார். திருக்காக்கரை தொகுதி எல்டிஎப் தேர் தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அவர், மெட்ரோ ரயில் விரிவாக்கத்துடன், பல்வேறு போக்குவரத்து வழிமுறைகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் போக்கு வரத்து நெரிசல் தவிர்க்கப்படும். உலகை யே ஈர்க்கும் நகரமாக திருக்காக்கரை மாற்றப்படும் என்றார். தகவல் தொழில்நுட்பத் திறனைப் பயன் படுத்தி அதிக வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்படும். வறுமை அகற்றப்படுவது டன், தொகுதியில் உள்ள அனைவருக்கும் வீடு வழங்கப்படும். நிலப்பட்டா பெறாத வர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குசாட் உள்ளிட்ட கல்வி நிறு வனங்கள் சர்வதேச தரத்திற்கு மேம் படுத்தப்படும். ஹரித (பசுமை) கேரளத்தின் முக்கிய வசீகர நகரமாக திருக்காகரை விளங்கும். கழிவுகளை அகற்றுவதோடு, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங் கப்படும். வெள்ளப்பெருக்கை தடுக்க தொழில்நுட்பத்தின் உதவியுடன் அறிவியல் முறைகள் பின்பற்றப்படும். வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்க ளுக்கு சமையல் எரிவாயு வழங்க ஏற்பாடு செய்யப்படும். திருக்காக்கரையில் சர்வ தேச தரத்திலான மைதானம் அமைக்கப் படும். இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஊராட்சி அள விலான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். விவசாயத் துறை மேம்படும். கேரளாவின் வளர்ச்சியுடன், திருக்காக்கரையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். யு.டி.எப். ஆட்சியில் திருக்காக்கரை நகாராட்சியும் தொகுதியும் பல ஆண்டுகளாக வளர்ச்சி யில் தேங்கி கிடக்கிறது. மேலும், மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களை செயல் படுத்தாததால், திருக்காக்கரை தொற்று நோய்களின் புகலிடமாக மாறியுள்ளது என்றார். நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலர் பி.ராஜூ தலைமை வகித்தார். அமைச்சர் பி.ராஜீவ், எல்.டி.எப். தொகுதிச் செயலர் எம்.சுவராஜ், எல்.டி.எப். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் எடப் பாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.பி.ராம கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜோஸ் தெற்றயில், காங்கிரஸ் (பி) மாவட்டத் தலை வர் பால் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.