விருதுநகர், ஏப்.26- படித்து முடித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வெறுப்பு அரசியலை தமி ழகத்தில் விரட்டியடிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் நகர்புற வேலை உறுதித் திட்டத்தை அம லாக்க வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கன்னியாகுமரியிலிருந்து திருச்சி வரை சைக்கிள் பிரச்சாரம் நடை பெறுகிறது. விருதுநகர் வந்தடைந்த பயணக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் தீபக்குமார் தனலமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம். ஜெயபாரத் வரவேற்றார். மாநில தலை வர் என்.ரெஜிஸ்குமார் சிறப்புரை யாற்றினார். மேலும் இதில் மாதர் சங்க மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரி, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
மதுரை
மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார், மாநிலத் துணைத் தலைவர் கோபி ஆகியோரது தலைமையில் வந்த பய ணக்குழுவினருக்கு வாலிபர் சங்கம் கள்ளிக்குடி ஒன்றியக்குழு சார்பில் மாலை அணிவித்து உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் க.தமிழரசன், மாவட்டச் செயலாளர் எஸ்.கார்த்திக், மாவட்டப் பொருளாளர் எஸ்.பால கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணி வித்து வரவேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுன் மாநிலக் குழு உறுப்பினர். எஸ்.கே.பொன் னுத்தாய், முன்னாள் ஒன்றியச் செய லாளர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். டி.கல்லுப்பட்டியில் சிபிஎம், சிஐடியு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், கட்டுமானத்தொழிலாளர் சங் கம் சார்பில் மலர் தூவி, பொய்க்கால் குதிரை, மாடு ஆட்டம் என மேள தாளங்கள் முழங்க உற்சாக வர வேற்பு அளித்தனர். பேருந்து நிலை யம் அருகே வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப் பினர் பா.ரவி ஒன்றியச் செயலாளர் வி. சமயன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கல்லுப்பட்டி பேருந்து நிலையத் தில் வெள்ளரிக்காய் விற்றுக்கொண்டி ருந்த ராணி என்ற பெண் விற்பனைக் காக வைத்தறிந்த வெள்ளரிக்காய் சாக்குபையை பயணக்குழு தலை வர் ரெஜிஸ்குமாரிடம் வழங்கி, உங் கள் பயணம் ஜெயிக்கட்டும் என்று வாழ்த்தினார். கட்சியின் திருமங்கலம் தாலுகாக் குழு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. திருமங்கலம் தாலு காச் செயலாளர் ஜி.மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் க.பிரேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர். மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) மதுரை கிளை சார்பில் மாவட் டச் செயலாளர் சுரேஷ்குமார் உள் ளிட்டோர் பயணக் குழுவினருக்கு கதி ராடை அணிவித்து வாழ்த்தினர்.
பக்கேடா விற்று பாஜக அரசுக்கு கண்டனம்
பட்டதாரிகள் அனைவரும் பக் கோடா விற்று பிழைத்துக்கொள் ளுங்கள் என்று கூறிய பிரதமர் மோடி மற்றும் அதன் அரசாங்கத்தை கண் டிக்கும் வகையில் பட்டதாரி உடை யில் பக்கோடா விற்பது போல பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் நிகழ்வு டி.கல்லுப்பட்டியில் நடைபெற்றது. இதனை கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் சி.மணிகிருஷ்ணன் செய்தார்.