districts

img

உயர் கல்விக்கு ரூ. 30.50 லட்சம் கடன்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா சாதனை

மதுரை, மே 15- அரசுக் கல்லூரியில் படித்த மாணவிக்கு  பிணையில்லாமல் ரூ. 30.50 லட்சம் கல்வி கடன் வழங்கி   மதுரை மீண்டும் சாதனை சாதனை படைத்துள்ளது. மதுரை மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. ஸ்டவ் ரிப்பேர் செய்யும் தொழி லாளி. இவரது மகள் சிந்துவிற்கு வெளிநாட்டில் உயர் கல்வி படிக்க பிணையில்லா கடன் வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள யூனி யன் பேங்க் ஆப் இந்தியாவில் நடைபெற்றது. மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்துகொண்டு மாணவி சிந்து விற்கு உயர்கல்வி படிப்பிற்கான பிணையில்லா கல்வி கடனுக்கான ஆணையை வழங்கினார்.  அப்போது வங்கியின் மண்டல மேலாளர் டி.கே.அபிஜித், துணை மண்டல மேலாளர் ஜி. இளஞ்செழி யன், தெற்கு மாசி வீதி கிளை மேலாளர் ஜே.சார்லஸ், மதுரை மாவட்ட வணிகக் மேம்பாட்டு அதி காரி என்.சம்பத்குமார்,  மதுரை முதன்மைக் கிளை மேலாளர் மெரின் ஜிம், மதுரை வெண்கலக் கடைத் தெரு முதுநிலை மேலா ளர் சி.மகேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட்கட்சியின் பகுதிக்குழு செயலா ளர் பி. ஜீவா ஆகியோர் உடனி ருந்தனர். தொடர்ந்து சு.வெங்கடேசன் பேசியதாவது:- மதுரை மாவட்டம் ஒரு மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளதை அனைவரும் அறிவர்.  கல்விக்கடனாக ரூ.125 கோடி  சாதனை படைத்துள் ளோம்.

தமிழ்நாட்டில் நூறு கோடிக்கு மேல் கல்வி கடன் கொடுத்துள்ள மாவட்டமாக மதுரை மாவட்டம் உள்ளது.  இந்தாண்டு கல்விக் கடனுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் 81 சதவீதம் பேருக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் மிகப்பெரிய சாதனை. இந்தாண்டு ரூ.150 கோடி கல்விக்  கடன் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மேல்நிலைக்கல்வி முடித்து, மதுரை மீனாட்சி அரசு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்த மேலப்பொன்னகரம் பகுதியில்  வசிக்கும் மாணவி சிந்து இங்கி லாந்து வேல்ஸ் நகரில் உள்ள ஹார்டியப் யுனிவர்சிட்டியில் முதுகலைப் படிப்பிற்கு விண்ணப் பித்துள்ளார். அவருக்கு ரூ. 30 லட்சத்து 50 ஆயிரம் எந்த ஒரு பிணையும் இல்லாமல் தெற்குமாசி வீதியில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வழங்கியுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய மாணவி சிந்து,  “நான் இன்றைக்கு இங்கி லாந்தில் உள்ள ஒரு மிக உயர்ந்த பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்கிறேன் என்றால் அதற்குக் காரணம் யூனியன் வங்கி. நான்  படிக்க ஆசைப்பட்டபோது கையில் பணம் இல்லை  யூனி யன் வங்கி செய்தியை செய்தித் தாள்கள் மூலம் அறிந்து விண் ணப்பித்தேன். எனக்கு வங்கி கடன் வழங்கியுள்ளது.  நான் என்னு டைய கடமையை சரியாகச் செய்வேன் மதுரை மக்களவை உறுப்பினருக்கு நன்றி தெரிவிக்கி றேன். எனக்கு ஊக்கம், உற்சாகம் அளித்தவர் அவர் தான் என்றார்.