districts

img

கௌசிகா ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் மாசுபடும் நிலத்தடி நீர்

விருதுநகர், பிப்.3- விருதுநகரில் கௌசிகா ஆற்றில் மக்  கும் மற்றும் மக்காத குப்பைகள் கொட் டப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது. எனவே, தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனே அகற்றிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர் வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கௌசிகா ஆறானது, மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் உருவாகி விருது நகரின் தெற்குப் பகுதியில் செல்கிறது.மழைக் காலங்களில் இந்த ஆற்றில் கரை புரண்டு மழை நீரானது வெள்ளமாக செல் லும். பல நேரங்களில் கரையைக் கடந்தும் குடியிருப்பு பகுதிக்குள் கௌசிகா ஆற்றின் தண்ணீர் புகுந்து விடுவதும் உண்டு. இந்த ஆற்றில் தண்ணீர் செல்வதால் நகரின் தெற்கு பகுதியில் உள்ள அய்யனார் நகர், பர்மா காலனி, பிள்ளையார் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, பெரிய பள்ளி  வாசல் தெரு, சீதக்காதி தெரு, மொன்னி தெரு, அஹமது நகர், பாத்திமா நகர்,  கட்டையாபுரம், ஆத்து மேடு, மாத்திநாயக் கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நிலத்தடி நீர்  மட்டம் பெரிய குறைவின்றி கிடைத்து வரு கிறது. இந்நிலையில், விருதுநகரின் குப்பை கொட்டும் இடமாக கௌசிகா ஆறு மாறி யுள்ளது. குறிப்பாக பாவாலி மற்றும் கூரைக்குண்டு ஊராட்சி பகுதிகளில் இருந்து வரும் குப்பைகள் பெரும்பாலும் கௌசிகா ஆற்றில் வீசப்படுகிறது. இதேபோல், ஆற்றை ஒட்டியுள்ள நகராட்சி பகுதிகளின் குடியிருப்புகளில் இருந்தும் கௌசிகா ஆற்றின் நீர் நிலைகளில் தொடர்ந்து குப்பை கள் கொட்டப்படுகின்றன.

கண்டுகொள்ளாத உள்ளாட்சி நிர்வாகங்கள்

இந்த மோசமான செயலை, உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டுகொள்வதில்லை. கடந்த காலங்களில் எடை குறைவான பிளாஸ்டிக் கேரி பைகள் தயாரிப்பு பெரு மளவு தடுக்கப்பட்டது. இதன் காரணமாக நீர் நிலைகளில் குப்பைகள் வீசப்படுவது சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், மீண்டும் எடை குறைவான பிளாஸ்டிக் கேரி பைகள் தயாரிக்கும் பணி  தீவிரமடைந்து வருகிறது. இதனால் நீர்  நிலைகள் முழுவதும் குப்பைகள் தேங்கி  கிடக்கிறது. குறிப்பாக பாத்திமா நகர்  ஆத்துப்பாலம், சாத்தூர் சாலை, கிருஷ்ண மாச்சாரி சாலை, முத்துராமலிங்கம் நகர், பர்மா காலனி, அய்யனார் நகர், போலீஸ் பாலம் ஆகிய பகுதிகளில் நீர் நிலைகளில் மக்காத குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றை விருதுநகர் நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில், நிலத்தடி நீர்  மட்டம் குறைந்து போவதோடு, நீர் நிலைகள் பெரும் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள் ளது. எனவே, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், கௌசிகா ஆற்றில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.