திண்டுக்கல், ஏப்.1- வனவிலங்குகளிடமிருந்து காப்பி பயிர்களையும், விவசாயி களையும், பொதுமக்களையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என்று பண்ணைக் காட்டில் நடைபெற்ற காப்பி விவ சாயிகள் பேரவையில் வலியுறுத் தப்பட்டுள்ளது. காப்பி விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட அமைப்பு மாநாடு வெள்ளியன்று கொடைக் கானல் வட்டம் பண்ணைக்காட்டில் நடைபெற்றது. இந்த இம்மாநாட் டில் காப்பி விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் டி.ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி. துணை செயலாளர் டி.அஜய்கோஷ், மாவட்டக்குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, சிபிஎம் ஒன்றியச்செயலாளர் ஜோசப் ஆகியோர் பேசினர். மாநாட் டில் காப்பி விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத்தலைவராக எல். கண்ணன், மாவட்டச் செய லாளராக எம்.செல்லையா, பொரு ளாளராக ஜெகதீசன், மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2006 வன உரிமைச்சட்டப்படி பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பன்றிமலை, சிறுமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல தலைமுறைகளாக வசித்து விவசா யம் செய்து வரும் பாரம்பரிய வன விவசாயிகளின் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். காப்பி கொட்டைகளை காப்பி போர்டு மூலம் கொள்முதல் செய்ய வேண் டும். பட்டா இல்லாத காப்பி விவ சாயிகள் உட்பட அனைத்து விவ சாயிகளுக்கும் இடுபொருட்கள் மானிய விலையில் வழங்க வேண் டும். வனவிலங்குகளால் உயிர்ப் பலியான விவசாயிகள் மற்றும் சேத மடைந்த காப்பி பயிர்களுக்கு இழப் பீடு வழங்க வேண்டும். வத்தல குண்டிலிருந்து தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கொடைக்கானல் வரை சென்று வந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மே மாதம் 18 ஆம் தேதி மாநில அளவிலான காப்பி விவசாயிகள் மாநாடு பண்ணைக்காட்டில் நடத் தப்போவதாக சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் டி.ரவீந் திரன் தெரிவித்தார். (ந.நி.)