மதுரை, ஜன.16- ஆனைமலை புலிகள் காப்ப கத்தின் கோழிக்கமுத்தி முகாமில் வனத்துறையினர் நடத்திய ‘யானை பொங்கல்’ கொண்டாட்டம் பழங்குடி யினர் குடியிருப்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏடிஆர் அதிகாரிகள், கோழி கமுதி பழங்குடியினர் குடியிருப்பில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பய ணிகள் பங்கேற்ற பொங்கல் விழாவில் 23 முகாம் யானைகளுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. வழக்கமான காலை உணவான களி (வேகவைத்த தினை மாவு), புழுங்கல் அரிசி, உப்பு, வெல்லம், தேங்காய் மற்றும் கரும்பு துண்டு கள் தவிர, யானைகளுக்கு இனிப்புப் பொங்கல், ஆப்பிள், அன்னாசி, வாழைப்பழம், மாதுளை மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது. பழங்குடி யினர் குடியிருப்பைச் சேர்ந்த பெண் கள் பொங்கல் வைத்தனர் நிகழ்வில் ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்ட துணை இயக்குநர் பார்கவ தேஜா, வன அலு வலர் எம்.சுந்தரவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். காட்டு யானையைப் பிடிப்ப தற்காக சத்தியமங்கலம் புலிகள் காப்ப கத்திற்கு அழைத்துச் செல்லப்பட் டுள்ள மூன்று கும்கிகளான கலீம், கபில்தேவ் மற்றும் முத்து ஆகியோர் பொங்கல் கொண்டாட்டத்தில் பங் கேற்கவில்லை.