திருநெல்வேலி, டிச. 15- சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள நிர்வாக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவையும் இனைத்து 38 பணியிடங்க ளை ரத்து செய்யும் உத்த ரவை கண்டித்து சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட் டத்தை யொட்டி நெல்லை நகர்புற கோட்டத்தில் கூட்டுக்குழு சார்பாக மதிய உணவு இடைவெளியில் கண்டன ஆர்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தை மின் ஊழியர் மத்திய அமைப் பின் (சிஐடியு) கல்லிடைக் குறிச்சி கோட்ட தலைவர் சுந்தரராஜன் துவக்கி வைத்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர். து. கந்தசாமி, கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் ஏராள மான கலந்து கொண்டனர்.