கல்வி உதவித் தொகை: ஆட்சியர் விஷ்ணு அறிவிக்கை
திருநெல்வேலி, நவ. 15- நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியுள்ளதாவது:- அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனி யார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. முதுகலை பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு மாண வர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை இணைய தளம் புதுப்பித்தலுக்கு கடந்த 10- ந் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. புதுப்பித்தலுக்கான விண் ணப்பங்கள் டிசம்பர் 6-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக் கான விண்ணப்பங்கள் ஜனவரி 20-ந் தேதிக்குள் இணைய தளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes-என்ற அரசு இணையதளத்தில் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது. மேலும் விவ ரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணு கலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
மக்கள் குறை தீர் கூட்டம்
திருநெல்வேலி, நவ. 15- நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் செவ்வாய்க் கிழமை வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகி யோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர் பாஸ்கரன், வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 53 மற்றும் 54 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி களை சேர்ந்த ஏராளமானோர் மாநகராட்சி குறை தீர்ப்பு கூட்டத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- ஆசிரியர் காலனி, மகிழ்ச்சி நகரில் உள்ள தரைதள நீர் தேக்க தொட்டிக்கு சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து பம்பிங் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் அடிக்கடி உடைப்பு, அதே போன்று தரை தள நீரேற்று தொட்டியில் இருந்து மேல்நிலை தொட்டிக்கு செல்லும் குழாய்களிலும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் வீடுக ளுக்கு வழங்கப்படும் குடிநீர் காலதாமதம் ஏற்பட்டு ஒருநாள் விட்டு ஒருநாள் என்பது மாறி 4 நாட்களுக்கு ஒரு முறை என வருகிறது. இது தொடர்பாக மண்டல அதிகாரி களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும், போனை எடுப்பதில்லை. எனவே மேயர் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
உரிமம் பெற்ற விற்பனையாளரிடம் மட்டுமே; நெல் விதை வாங்க வேண்டும் துணை இயக்குனர் அறிவுறுத்தல்
திருநெல்வேலி, நவ. 15- நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் ராஜ் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணி முத்தாறு அணை பாசன பகுதி விவசாயிகள் தற்போது பிசான பருவ நெற் பயிர் சாகுபடி செய்திட தயாராகி வரு கின்றனர். நெல் விதை வாங்கும்போது கீழ்க்கண்ட வழி முறைகளை தவறாது பின்பற்ற விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சான்றட்டை மற்றும் விபர அட்டை பொருத்திய நெல் விதைகளை விதை உரிமம் பெற்ற விற்பனையாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும். சான்றட்டையில் தமிழ்நாடு அரசு விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறையினால் தர உத்திர வாத விபரம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார நிலை விதை களின் சான்றட்டை வெண்மை நிறத்திலும், சான்று நிலை விதைகளின் சான்றட்டை நீல நிறத்திலும் இருக்கும். சான் றட்டை மற்றும் விபர அட்டை பொருத்திய சான்ற ளிக்கப்பட்ட விதைகளை வாங்குவது சிறந்தது. விவசாயி கள் விதை வாங்கும்போது சான்றட்டையில் குறிப்பிட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரி பார்த்து வாங்க வேண்டும். வாங்கும் விதைகளுக்கு விற் பனையாளரிடமிருந்து பயிர், ரகம், குவியல் எண் ஆகிய விபரம் குறிப்பிட்ட விற்பனைப் பட்டியலை தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களின் நெல் விதைகளை வாங்கும் விவசாயிகள் விதை மூடை களில் உள்ள உண்மை நிலை விபர அட்டையில் குறிப்பிட்ட விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடங்குளத்தில் அணுமின் நிலைய ஊழியர் திடீர் சாவு
திருநெல்வேலி, நவ. 15- திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்( 33). இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் நிறுவ னத்தின் சார்பில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடு பட்டு இருந்தார். இதற்காக கூடங்குளம் அருகே பரமேஸ் வரபுரத்தில் தனது சக நண்பர்களுடன் அவர் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார். ஒப்பந்த பணியாளரான ராஜேஷ் திங்கட்கிழமை இரவு பணிக்கு சென்றுள்ளார். செவ்வாய்க் கிழமை அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கு பணியில் இருந்தவர்கள் ராஜேசை மீட்டு ராதாபுரத் தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்த னர். இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்த ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மணிமுத்தாறு அருவியில் பயணிகள் குளிக்கத் தடை
திருநெல்வேலி ,நவ. 15- நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பெய்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மணி முத்தாறு அருவியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்தது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
திருநெல்வேலி, நவ. 15- நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. மாவட்டத்தில் மாநகர், புறநகர் மற்றும் அணை பகுதிகளில் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் தொ டர்மழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணை யான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 88.75 அடியாக உள்ளது. அந்த அணை யின் நீர்மட்டம் சராசரியாக 2 நாட்களுக்கு ஒருமுறை 1 அடி உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வரை அந்த அணை பகுதியில் 39 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்ட மும் உயர்ந்து வருகிறது. 90 அடியாக இருந்த நிலையில் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து தற்போது அணையின் நீர் மட்டம் 93.44 அடியாக உயர்ந்துள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 11971 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணி முத்தாறு அணையில் 76.30 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 730 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ஆம்தேதி தொடங்கிவிட்ட நிலையில் 2 வாரங்களுக்கு பின்னர் தற்போது தான் சற்று தீவிரம் அடைந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்தாலும், களக்காடு அருகே உள்ள வடக்கு பச்சையாறு அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. அந்த அணையின் நீர்கொள்ளளவு 49.20 அடி என்ற நிலையில் தற்போது வரை 13.25 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதாவது 6.47 சதவீதம் மட்டுமே தற்போது அந்த அணையில் நீர் இருப்பு உள்ளது. இதேபோல் நம்பியாறு அணையில் 18.95 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, மூலக்கரைப்பட்டி, களக்காடு, சேரன்மகாதேவி, கன்னடியன் பகுதிகளிலும், மாநகரில் நெல்லை, பாளை உள்ளிட்ட இடங்களிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக பாளையில் 29 மில்லிமீட்டரும், ராதா புரத்தில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாஞ்சோலை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அங்கு வானம் மேகமூட்டத்து டன் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மாஞ்சோலை பகுதியில் மட்டும் 64 மில்லிமீட்டர் மழை பதிவானது. நாலு முக்கு பகுதியில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. செவ்வாயன்று காலை நில வரப்படி அங்கு 12.1 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. காக்காச்சியில் 85 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 62 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
நெல்லை டவுன் பகுதியில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு- முகாம் நடத்த கோரிக்கை
திருநெல்வேலி ,நவ. 15- வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரு கிறது. இதனால் நெல்லை மாநகர பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மருத்துவ மனை மட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குறிப்பாக நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட டவுன் 24-வது வார்டு பகுதியில் ஏராளமானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள னர். அதிலும் பெரியதெரு, நடுத்தெரு, வேம்படி தெரு, மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த சிறுவர், சிறுமிகள் அதிகம் பாதிக்கபட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனையில் பெரும்பாலானோருக்கு டைபாய்டு அறிகுறிகள் காணப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி யினர் கூறும்போது, மழைக்காலங்களில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீர் கலங்கலாகவும், சுகாதாரமற்ற முறையிலும் வருகிறது. இதனால் காய்ச்சல் பாதிப்பு கள் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி கமிஷனர் உடனடி யாக தலையிட்டு தூய்மையான குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை காலத்தில் மாநக ராட்சி சுகாதார துறையினர் மூலம் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு
தூத்துக்குடி, நவ.15 தூத்துக்குடி மாவட்டத்தில் 7 ஆய்வாளர்கள் டிஎஸ்பி யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 239 காவல் ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு அளித்து ஏடிஜிபி அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி தூத்துக்குடி வடபாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தனபால், தென்பாகம் குற்றப்பிரிவு ஆய்வாளர் மூக்கன், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், சைபர் கிரைம் ஆய்வாளர் சிவ சங்கரன், பசுவந்தனை காவல் ஆய்வாளர் சுதேசன், மணியாச்சி காவல் ஆய்வாளர் கோவிந்தன், கயத்தார் காவல் ஆய்வாளர் முத்து ஆகிய 7பேர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற 3.5 டன் கஞ்சா, பீடி இலைகள் பறிமுதல்: 14பேர் கைது!
தூத்துக்குடி, நவ.15 தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பீடி இலைகள் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலோர காவல் படையினர் தூத்துக்குடி கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் தூத்துக்குடியை சேர்ந்த 2 படகில் இருந்து இலங்கையை சேர்ந்த 2 படகிற்கு மூடைகளை ஏற்றி கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை கடலோர காவல்படையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். இந்த மூடை களில் மொத்தம் 3.5 டன் பீடி இலைகள் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் தூத்துக்குடியில் இருந்து 8 பேர் பீடி இலைகளை கடத்தி கொண்டு வந்ததும், பின்னர் அவர்கள் இலங்கையை சேர்ந்த 2 படகில் வந்த 6 பேரிடம் அதனை கொடுத்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடியை சேர்ந்த 8 பேர், இலங்கையை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 14 பேரை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட பீடி இலைகளுக்குள் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை யடுத்து பீடி இலை மூடைகள் மற்றும் 4 படகுகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட வர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் படகுகளையும் இந்திய கடலோர காவல்படை யினர் தூத்துக்குடிக்கு கொண்டு வந்து கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கின்றனர். அதன் பின்னரே கைது செய்யப்பட்டவர்களின் விபரம் மற்றும் கடத்தப்பட்ட கஞ்சா மற்றும் பீடி இலைகளின் மதிப்பு தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.