districts

img

மதுரை மாவட்ட மாணவர்களின் உயர் கல்விக்காக நாளை கல்விக்கடன் மேளா துவக்கம்

மதுரை, நவ.11-    ஒன்றிய அரசின் கல்விக் குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பின ருமான சு. வெங்கடேசன் முயற்சியால் மதுரை மாவட் டத்தில் கடந்தாண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரி  வளா கத்தில் அரசு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக  கல்லூரி மாண வர்களுக்கான கல்வி கடன் மேளா நடைபெற்றது.  இதில் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மாணவர்கள்  கலந்து கொண்டு 119 கோடியே 70 லட்சம்  கல்விக்கடன் பெற்று பயன் அடைந்தனர்.  சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர் கள் மற்றும் நடுத்தர குடும்பத் தை சேர்ந்த மாணவர்களின் உயர் கல்விக்காக கல்விக் கடன் பெறுவது கனவாக இருந்ததை மாற்றி மதுரை மாவட்டத்தில் உள்ள அனை த்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் கிடைக்க வேண்டும். உயர்கல்வியில் மதுரை மாவட்டம் முதன்மை  மாவட்டமாக திகழ வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனின் பெரும் முயற்சியில்  மீண்டும் ஒரு கல்விக் கடன் புரட்சி நாளை துவங்குகிறது.

மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் சார்பில்  கல்லூரி மாண வர்களுக்கான கல்வி கடன் மேளா வருகின்ற நவம்பர் - 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழ மையன்று  இரண்டாவது கட்டமாக  நடைபெற உள்ளது. இது குறித்து மதுரை நாடாளுமன்றம் உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறுகை யில், கடந்த ஆண்டு உயர் கல்வி படிப்புக்கான கல்வி கடன் மேளா  வெகு சிறப்பாக  நடைபெற்றது .இதில் ஐந்தா யிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரூ. 119 கோடியே 70 லட்சம் ரூபாயினை அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக  பெற்று பயன டைந்துள்ளனர்.  அதே போல்  இந்த ஆண்டும் இந்த இலக்கை இரட்டிப்பாக்குவ தற்கும் உயர்கல்வியில் மதுரை மாவட்டத்தில் உள்ள சாமானிய மாணவர்களும் பயனடைய வேண்டுமென்று மிகப்பெரும் முயற்சியினை மேற்கொண்டு ஒன்றிய அரசின் கல்விக் குழு உறுப்பினர் என்ற அடிப்ப டையில்  ஏற்பாடுகள் செய்து வருகின்றோம். அந்த அடிப்ப டையில் இந்த ஆண்டும் கல்விக்கடனில் பயன்பெ றும் மாணவர்கள் எண்ணிக் கையும் அதிகரிக்கக்கூடும். மதுரை மாவட்டம் உயர் கல்வியில் முன்னேறிய மாவட்டமாகவும் திகழும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நடப்பு கல்வி யாண்டில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடைந்து வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.