districts

முல்லைப்பெரியாறு அணையில் நிலநடுக்க கருவி, அதிர்வு கருவி பொருத்தும் பணி

தேனி, மே 30- முல்லைப்பெரியாறு அணையில் தேசிய புவியி யல் ஆய்வு மைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜய ராகவன் தலைமையில் நில நடுக்க கருவி மற்றும் அதிர்வு கருவிகள் பொருத்தும் பணி  தொடங்கியுள்ளது  முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வு மாணிகள் பொருத்த மேற்  பார்வைக்குழு முடிவுசெய்  தது. இதையடுத்து பெரியாறு அணையின் மேல்பகுதி, கேலரிப்பகுதி மற்றும் கேம்ப்காலனி ஆகிய மூன்று இடங்களில் நிலநடுக்க  கருவி (சீஸ்மோகிராப் 1) மற்  றும் அதிர்வுக் கருவிகள் (ஆக்சலரோகிராப் 2) பொருத்த முடிவு செய்து, கடந்த பிப்ர வரி 23 ஆம் தேதி தேசிய புவி யியல் ஆய்வு மைய முது நிலை முதன்மை விஞ்ஞானி  விஜயராகவன் தலைமை யில், பெரியாறு அணையின்  மேல்பகுதியில் ஒரு ஆக்சல ரோகிராப் கருவி பொருத்தப்  பட்டது.  இந்த ஆக்சலரோகிராப் கருவியில் பதிவான அதிர்  வலைகள் செயற்கைக் கோள் மூலமாக ஹைதரா பாத்தில் உள்ள ஒன்றிய அர சின் தேசிய புவியியல் ஆய்வு  மையத்திற்கு அனுப்பப் பட்டு அங்கிருந்து வரை பட மாக கிடைக்கிறது. அடுத்த  படியாக கேலரிப்பகுதி மற்  றும் கேம்ப் காலனி பகுதி யில் ஒரு ஆக்சலரோகிராப் மற்றும் ஒரு சீஸ்மோகிராப் பொருத்த முடிவு செய்யப் பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய புவியியல் ஆய்வு மைய முதுநிலை முதன்மை விஞ்ஞானி விஜயராகவன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் செவ்  வாய்க்கிழமை அணையின் கேலரி பகுதி மற்றும் கேம்ப்  காலனி பகுதியில் இக்கருவி கள் பொருத்தும் இடங்களை ஆய்வுசெய்தனர்.  ஆய்வின்போது காவிரி தொழில்நுட்பக்குழும முதன்மை பொறியாளர் செல்வராஜ், செயற்பொறி யாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவிப்பொறியாளர்கள் ராஜகோபால், நவீன் உட்பட தமிழக அதிகாரிகள் உடனி ருந்தனர்.