districts

img

வேடசந்தூரில் தலித் - இஸ்லாமியர் வீடுகளை இடிக்க வந்த சமூக விரோதிகளின் முயற்சி முறியடிப்பு

திண்டுக்கல், ஜுன்.16- வேடசந்தூரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் இஸ்லா மியர், தலித் மக்கள் வீடுகளை இடிக்க ஜே.சி.பி. இயந்திரத்துடன் வந்த சமூக விரோதிகளை சிபிஎம் தலைவர்கள் தலைமையில் கிராம மக்கள் முறியடித்தனர். வட்டாட்சி யர் அலுவலகததை முற்றுகை யிட்டு  மனுக்கொடுக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.   திண்டுக்கல் மாவட்டம், வேட சந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட எம்.ஜி. ஆர்.நகரில் கடந்த 40 ஆண்டுக ளுக்கு மேலாக இஸ்லாமியர்கள் மற்றும் பட்டிலினத்தைச் சேர்ந்த  30க்கும் மேற்பட்ட  குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த மக்கள் பல முறை பட்டா கேட்டும் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவ லகத்தில்  தராத நிலை உள்ளது. இந்நிலையில் வேடசந்தூர் பகுதி நில புரோக்கர்கள் இந்த இடம் எங்க ளது இடம் என்று கூறியும், பட்டா  இருப்பதாகவும் கூறி  அந்த நிலத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு 2 முறை ஜே.சி.பி. இயந்திரத்தை கொண்டு வந்து  குடியிருப்புகளை இடித்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

அப்போது மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கள் தலைமையில் கிராம மக்கள் திரண்டு. ஜே.சி.பி. இயந்திரத்துடன் வந்த நில புரோக்கர்களை விரட்டி யத்தார்கள்.  வீடுகளை இடிக்க முயற்சித்த சம்பவத்தை  கண்டிக்கும் விதமாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வட்டாட்சியர் அலு வலகத்தில் வெள்ளியன்று மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  பட்டா வழங்க   வட்டாட்சியர் உறுதி இதனையடுத்து  வேடசந்தூர் வட்டாட்சியரிடம் நடந்த பேச்சுவார்த் தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாவட்டச்செயற் குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச்செயலாளர் எம்.பெரிய சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர்.நகர் கிளைச்செயலாளர் நாகவேல்,  ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது வட்டாட்சியர் விஜய லட்சமி கூறுகையில், வீடுகளை அளந்து பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்தார். (நநி)