கண்டமனூர், ஜூன் 26- தேனி மாவட்டம் கண்ட மனூர் கிராமத்தில் மூன்றாயி ரம் வீடுகள் உள்ளது. இந்தக் கிராமத்திற்கு குன்னூர் மற் றும் வீரபாண்டி முல்லை யாற்றிலிருந்து குடிநீர் வழங் கப்படுகிறது. குடிநீர் விநி யோகத்திற்காக கண்டம னூர் கிராமத்தில் ஆறு மேல் நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக கண்டமனூர் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட் டுமே குடிநீர் வழங்கப்படு கிறது. குடிநீர் வழங்கப்படும் நாட்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று முண்டிய டித்து தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். இருப்பினும் போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே மக்கள் வேறு கிராமங்க ளுக்குச் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். மாவட்ட அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகள் செய்து கண்டமனூர் கிராமத்தின் குடிநீர்த் தட்டுப்பாட்டை நிரந்தரமாகப் போக்க வேண்டும். நமது நிருபர்