தேனி, அக்.15- ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக இளைஞர் அணி மற் றும் மாணவர் அணி சார்பில் அக்டோபர் 15 சனிக்கிழமை யன்று தேனி , உத்தமபாளை யம், சிவகங்கையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் பாரதிய ஜன தாவை கண்டித்தும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேனி வடக்கு மாவட்டச் செயலா ளர் தங்க.தமிழ்செல்வன், அவைத் தலைவர் பி.டி.செல்லப் பாண்டி, பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் ,தேனி நகர் செயலாளர் என்.சி.நாரா யணபாண்டி, தேனி நகர் மன்ற தலைவர் ரேனுப்பிரியா பாலமுருகன்,தேனி ஒன்றி யக்குழு தலைவர் எம்.சக்கர வர்த்தி உள்ளிட்ட ஆயிரக்க ணக்கானோர் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். உத்தமபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் என்.ராம கிருஷ்ணன் எம்.எல்.ஏ, தேர் தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன், தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இரா.பாண்டி யன் உள்ளிட்ட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
சிவகங்கை சிவகங்கையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாவட்டத் தலைவர் நாகானி செந்தில் குமார், மாணவரணி மாவட் டத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி, திமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் திருப்பு வனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங் கால் ஊராட்சி மன்றத் தலை வர் மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப. வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். சிவ கங்கை நகர் செயலாளரும், நகர்மன்ற தலைவருமான துரைஆனந்த் நன்றி கூறி னார்.