தூத்துக்குடி, பிப்.6- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில் 15 வார்டுகள் உள்ள புதூர் பேரூராட்சியில், 11ஆவது வார் டில் போட்டியிட திமுக சார்பில் உமாராணி என்பவர் மனு தாக்கல் செய்தார். அதிமுக உள் பட வேறு எந்தக் கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்ய வில்லை. சனியன்று நடைபெற்ற பரிசீலனையில், உமாராணியின் வேட்புமனு ஏற்கப்பட்டது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான திங்கட்கிழமை (பிப்.7) அவர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப் படவுள்ளது. விளாத்திகுளம் சட்டப்பேர வைத் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகள் தொடர்ந்து அதி முகவே வெற்றிபெற்று வந் துள்ளது. கடந்த சட்டப்பேர வைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு ஜீ.வி. மார்க்கண் டேயன் வெற்றிபெற்ற நிலை யில், தற்போது நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லில், புதூர் பேரூராட்சி 11ஆவது வார்டில் திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியினரும் மனுதாக் கல் செய்யவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.