districts

img

2024 தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

சிவகாசி, ஜூன் 14- தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி  ஏற்பட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணி 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும் என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் தெரிவித்தார். சிவகாசி அரசு மருத்துவமனை வளா கத்தில் ரூ,50 லட்சம் மதிப்பில் குருதி பகுப்  பாய்வு மையம் தொடக்க விழா நடை பெற்றது. இதில் விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் ஜெயசீலன், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன், மாந கராட்சி மேயர் சங்கீதா உள்ளிட்டோர் பங்  கேற்றனர்.  அதனைத் தொடர்ந்து மாணிக்கம் தாகூர் எம்.பி., செய்தியாளர்களிடம் கூறியதா வது: கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற  சட்டமன்ற தேர்தலின் போது அரவக் குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி யை எதிர்த்துப் போட்டியிட்ட அண்ணா மலை ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம்  கொடுத்தும் மக்கள் அவருக்கு தோல்வி யை பரிசாக தந்தனர்.

இந்த  வெறுப்பு கார ணமாகவே தற்போது அமைச்சர் செந்தில்  பாலாஜி மீது அமலாக்கத்துறை மூலமாக  பழி வாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்றார். ஒடிசா ரயில்கள் விபத்து குறித்த கேள்  விக்கு, ஒன்றிய ரயில்வே துறை அமைச் சர் வைஷ்ணவ் ஒரே நேரத்தில் 4 துறை களின் அமைச்சராக உள்ளார். இத னால் ரயில்வே துறையில் ஏற்படும் பிரச்ச னைகளை அவரால் கவனிக்க முடிய வில்லை.  இதேபோல் பிற துறைகளில்   அவ சரமான  உடனடி  நடவடிக்கைகளைக் கூட   எடுக்க முடியவில்லை. இதன் காரணமா கவே, ஒடிசா ரயில்வே விபத்து நடைபெற் றுள்ளது. ரயில்வே அதிகாரிகள் விபத்து பற்றி  சொன்ன பிறகும் கூட எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்காதது தான் தொடர் ரயில்வே விபத்துக்கு காரணமாகும்.  இதற்கு முழு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சர்  ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்த  கேள்விக்கு,  பிரதமர் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசானது, தமிழக மக்களை ஏமாற்றி, ஏளனம் செய்யும் வகை யில் கடந்த 2015 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் மட்டுமே நாட்டியது. நிதி ஒதுக்கவில்லை.   இதற்கு  அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகி றோம். எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி  இந்த திட்டம் நிறைவேற தில்லியில் உண்ணாவிரதம் இருப்போம். தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்த லில் அண்ணாமலை தலைவராக இருந்து அதிமுக -பாஜக கூட்டணி வைத்தால் திமுக- காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்  என்றார்.