districts

img

டிசம்பர் 3 அன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு

சிவகங்கை மாவட்டம், கீழக்கண்டனியில் தற்காலிக இடமான பண்ணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள அரசு மாதிரிப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து டிசம்பர் 3 அன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் கற்றல் முறை குறித்து கலந்துரையாடினார். கூடுதலாக மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் .ஆர்.காளிதாஸ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.