districts

img

மாவட்ட நிர்வாகம், தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் மேலூர் மக்களிடம் சு.வெங்கடேசன் எம்.பி., உறுதி

மதுரை, ஜூன் 20- மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மேலூர் தாலுகாவில் திங்களன்று “கிராமங்கள் தோறும் சென்று” மக்களைச் சந்தித்து உரையாடினார். இந்த மக்கள் சந்  திப்பு நிகழ்வை பத்திரப்பதிவுத்துறை அமைச்  சர் அ.வலையபட்டியில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசுகையில், “தமி ழக முதல்வர் கிராமங்கள் தோறும் மக்களைச் சந்திக்க வேண்டும். அவர்களது கோரிக்கை களை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும் என்றார். அந்த அடிப்படையில் மக்கள் நலத்  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் கிராமங்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவே இந்த மக்கள் சந்திப்பு இயக்கம். மக்கள் தங்களது மனுக்  களை அளியுங்கள். உடனடியாக நடவடிக்கை  எடுக்கப்படும். தேவைப்பட்டால் அதிகாரிகள்  சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு வருவார்கள்” என்றார். தொடர்ந்து மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், அ.வலையபட்டி, அழகா புரி, கிடாரிப்பட்டி, புலிப்பட்டி, புதுச்சுக்காம் பட்டி கிராம மக்களை திங்களன்று காலை  சந்தித்தார். அவருடன் திமுக மாவட்டக் கவுன்  சிலர் நேருபாண்டி, அ.வல்லாளபட்டி பேரூ ராட்சித் தலைவர் பி.குமரன், மேலூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

காவிரி குடிநீர்- பகுதி நேர ரேசன் கடை
அ.வலையபட்டி மக்கள், தங்கள் கிரா மத்திற்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தர வேண்டும். சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். தார் சாலை வசதி  வேண்டும். பேருந்து வசதி வேண்டும். காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீரை அ.வலைய பட்டிக்கும் வழங்க வேண்டுமென்றனர். குறிப்  பாக 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். அழகாபுரி மக்கள், மறைந்த மக்களவை உறுப்பினர் பொ.மோகன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டிக்கொடுத்த சமுதாயக் கூடத்தை புதுப்பிக்க வேண்டும். குடி தண்ணீர் வசதியை மேம்படுத்த வேண்  டும். முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். சாம்பிராணிபட்டியில் வசிக்கும் நரிக்குற வர் சமூக மக்கள், தங்களுக்கு வீட்டுமனை  வழங்க வேண்டும். நாங்கள் ரேசன் கடைக்கு நான்கு கி.மீ. செல்ல வேண்டியுள்ளது. சாம் பிராணிபட்டிக்கு பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கை தான் மிக முக்கியமானது என்றனர். அத் தோடு சாம்பிராணிபட்டிக்கு பேருந்து வசதி  வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தனர். கிடாரிப்பட்டியில் வசிக்கும் பட்டியலின மக்கள் தங்கள் பகுதிக்கு சுகாதார வளா கம் கட்டித்தர வேண்டும் என்றனர்.

மரத்தடியில் படிக்கும் மாணவர்கள்
புலிப்பட்டி கிராம மக்கள் வைத்த முதல்  கோரிக்கை, புலிப்பட்டியிலிருந்து-மாட்டுத் தாவணிக்கு பேருந்து வசதி வேண்டும் ஏற்க னவே வந்த பேருந்து நின்று விட்டது. இங்  குள்ள ஆரம்பப்பள்ளி வளாகத்தில் தான் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. பெரும்பாலான மாணவர்கள் மரத்தடியில் தான் படிக்கிறார்கள். உயர்நிலைப்பள்ளி கட்ட  கூடுதல் இடவசதி செய்து தர வேண்டுமென் றனர்.  புலிப்பட்டி கிராமச் சாலையை மேலூர் தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்க வேண்டும். புலிப்பட்டி கிராம ஊராட்சி என்ப தால் குறிப்பிட்ட எல்லையோடு சாலை அமைப்பது நின்றுவிட்டது. என்றனர்.  பட்டியலின மக்கள், மயானத்திற்கு தார்  சாலை வேண்டும். மயான மேற்கூரை வேண்  டும். பள்ளிக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்றனர்.  புதுச்சுக்காம்பட்டியில் வசிக்கும் வினோபா காலனி மக்கள் மயானத்திற்கு மேற்கூரை அமைக்க வேண்டும். வினோபா காலனி, அம்பேத்கர் நகர், மேட்டுப்பட்டி, காமாட்சிபுரம் பகுதிகளில் வசிக்கும் மக்கள்  மூன்று கி.மீ. நடந்து சென்று தான் பிரதான  சாலைய அடைகிறோம். எனவே பெரியார் பாசனக் கால்வாயை கடந்து செல்வதற்கு வசதியாக பாலம் அமைத்துத் தர வேண்டு மென்றனர். மக்கள் முன்வைத்த கோரிக்கைளுக்கும், மனுக்களுக்கும் பதிலளித்த சு.வெங்க டேசன், “சில கோரிக்கைகள் ஒரிரு மாதங்க ளில் நிறைவேற்றப்படும். மாவட்ட நிர்வா கத்தின் மூலம் செய்ய வேண்டிய பணிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக் கப்படும். மேலும் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். தொடர்ந்து கூத்தப்பன்பட்டி, கீழவளவு இ.மலம்பட்டி, கொங்கம்பட்டி கிராமங்களில் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு செய்து  தர வேண்டிய பணிகள் குறித்து கேட்டறிந் தார். மக்களவை உறுப்பினருடன் கட்சியின்  புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் த.செல்  லக்கண்ணு, செ.முத்துராணி, எஸ்.கார்த்திக், தாலுகா செயலாளர் எம்.கண்ணன், மாவட் டக்குழு உறுப்பினர் எம்.கண்ணன் மற்றும் வி.அடக்கிவீரணன், சி.அடைக்கன், எஸ்.பி. ராஜாமணி, மணவாளன், ஜெயராமன் ஆகி யோரும் வந்திருந்தனர்.