districts

img

விருதுநகரில் தீக்கதிர் சந்தா ரூ.1 லட்சம் வழங்கல்

விருதுநகர், நவ.28- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்  கதிர் சந்தா வழங்கும் விழா, தோழர் பி.ராமமூர்த்தி நினை வக கட்டட நிதி வழங்கும் விழா,  மேம்படுத்தப்பட்ட தியாகி சங்கரலிங்கனார் நூலகம் திறப்பு விழா விருதுநகரில் நடை பெற்றது. விருதுநகரில் எம்.ஆர்.வி நினைவகத்தில் மேம்படுத்  தப்பட்ட தியாகி சங்கரலிங்க னார் நூலகத்தை மூத்த தலை வர் எஸ்.பாலசுப்பிரமணி யன் தலைமையில் எம்.ஊர்  காவலன், தேனிவசந்தன் ஆகியோர் முன்னிலையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ் ணன் திறந்து வைத்தார். தீக்கதிர் சந்தா வழங்கல்  மற்றும் பி.ஆர்.நினைவக கட்  டட நிதி வழங்கும் நிகழ்ச் சிக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. அர்ஜூனன் முன்னிலை வகித்  தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முக மது நிகழ்வை துவக்கிவைத் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி தீக்  கதிர் சந்தாவிற்கான தொகை ரூ.1,04,150-யும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமார், பி.ஆர். நினைவக கட்டிட நிதி முதல் தவணை ரூ.4லட்சத்தையும், திருத்தங்கல் செல்வம் ஊறு காய் கம்பெனியின் குடும்பத்  தார் சார்பில் ரூ.20ஆயிரமும், விருதுநகர் வடக்கு ஒன்றி யக் குழு உறுப்பினர் ஜே.ஜே. எஸ்.சீனிவாசன் குடும்பத் தார் உண்டியல் மூலம் சேமித்த தொகை ரூ.6,400-ஐ அரசியல்  தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனிடம் வழங்கினர். மாவட்டக் குழு  உறுப்பினர் ஆர்.முத்து வேலு நன்றி கூறினார். மாநி லக்குழு உறுப்பினர் எம்.மகா லட்சுமி, மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், பி.என்.தேவா, அ. விஜயமுருகன், வி.முருகன்,  எல்.முருகன், எம்.சுந்தர பாண்டியன், எஸ்.லட்சுமி, கே.முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.