தேனி, ஏப்.13- தேனியில் மோசடி செய்ததாக ஊராட்சி செயலாளர்கள் இருவரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் உத்தர விட்டுள்ளார். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட கொத்தப்பட்டியில் ஊராட்சிச் செயலாளராக பணிபுரி பவர் சி.ஞானசேகரன். கட்டிட அனு மதி வழங்குவது தொடர்பாக வசூ லிக்கப்பட்ட தொகைக்கான ரசீதில் ஊராட்சித் தலைவர் கையொப்பம் பெறுவதற்குப் பதிலாக தானே போலி கையெழுத்து போட்டு வந்துள்ளார். அதிகாரிகளின் ஆய்வில் இந்த நிதி முறைகேடு உறுதி செய்யப் பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சிகளின் ஆய்வாளரும், மாவட்ட ஆட்சியருமான க.வீ. முரளீதரன், ஊராட்சிச் செயலா ளர் ஞானசேகரனை தற்காலிகப் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். தேனி தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் கொடுவிலார் பட்டி. இந்த ஊராட்சியில் கடந்த 31-ம் தேதி ஆட்சியர் க.வீ.முரளீ தரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பாக பல்வேறு முறைகேடும் நடைபெற்று இருப்பதும், பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலாளர் ப. ரகுநாத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.