வெம்பக்கோட்டை, ஜூலை.30- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட தட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல் குளத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருன்றன. அதில் தங்க அணிகலன், தங்கப் பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல் விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுடுமண் தட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருவெள்ளை நிறத்துடன் காணப்பட்டுள்ள இந்த சுடுமண் தட்டு 1.79 செ.மீ தடிமன் உள்ளது.